'அண்ணனால் உயர்ந்தேன்' என்கிறார் ஜெயம் ரவி

'அண்ணனால் உயர்ந்தேன்' என்கிறார் ஜெயம் ரவி

1 mins read
1d1adc62-3ee6-45dc-bfbc-05e1326f69c3
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி. -

எந்த விமர்­ச­ன­மாக இருந்­தா­லும் அதை ஏற்­றுக்கொள்­ளக் கூடிய பக்­கு­வம் தமக்­கும் தனது குடும்­பத்­தி­ன­ருக்­கும் உள்­ளது என்­கி­றார் ஜெயம் ரவி.

நேற்று முன்­தி­னம் தமது 42வது பிறந்­த­நாளை கொண்­டா­டிய அவர், திரை­யு­ல­கில் இன்று தாம் அடைந்­துள்ள உயர்­வுக்கு அண்­ணன் 'ஜெயம்' ராஜா­தான் காரணம் என்று செய்­தி­யா­ளர்­களிடம் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

"தர­மான திரைப்­ப­டங்­களைத் தேர்ந்­தெ­டுத்து நடிக்கவேண்­டும் என்ற எண்­ணம்­தான் எனது தரப்பில் தோல்வி படங்­க­ளின் எண்ணிக்­கையைக் குறைத்­துள்­ள­தாக கரு­து­கி­றேன்.

"அது­வும் 'ஜெயம்' திரைப்­ப­டத்தை முடித்­து­விட்டு எட்டு மாதங்­கள் வீட்­டில் சும்மா இருந்தேன்.

"நல்ல படங்­க­ளுக்­காக காத்­தி­ருப்­பது தவ­றில்லை என்று என் தந்தை அறி­வு­றுத்தி உள்­ளார்.

"எனது படங்­களில் உள்ள நல்ல விஷ­யங்­களை மட்­டு­மல்­லா­மல், அதில் உள்ள தவ­று­க­ளை­யும் சுட்டிக் காட்­டுங்­கள். அப்­போ­து­தான் திருத்திக்கொள்ள முடி­யும்," என் கி­றார் ஜெயம் ரவி.