கணினி விளையாட்டுகளை வடிவமைக்கும் நாயகன் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
இந்நிலையில் அவன் உருவாக்கிய கதாபாத்திரங்கள் திடீரென நேரில் வரத் தொடங்குகின்றன. இதையடுத்து ஓர் இரவு வேளையில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் கதை.
'இரவு' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில், 'எட்டு தோட்டாக்கள்' பட நாயகன் வெற்றி நடிக்கிறார். அவரது ஜோடியாக ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், பொன்னம்பலம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
திகில் படமாக உருவாகும் 'இரவு', அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்கிறார் இயக்குநர் ஜெகதீசன். இவர் ஏற்கெனவே 'பக்ரீத்' என்ற படத்தை இயக்கி உள்ளார்.
"நல்ல கதைகள் நிச்சயம் வெற்றிபெறும். அதனால் எப்போதுமே கதைத் தேர்வில் மிகக் கவனமாக உள்ளேன்," என்கிறார் வெற்றி.

