ஒரு காவலரின் சாகசங்கள்

ஒரு காவலரின் சாகசங்கள்

2 mins read
79d94df1-5aac-4e2f-afdc-99e7a33ca05a
-
multi-img1 of 2

காவல்­து­றை­யில் சாதா­ரண காவ­ல­ரா­கப் பணி­யாற்­றும் நாய­கன், அசா­தா­ர­ண­மாகச் செய்­யும் சாக­சங்­களை வாழ்­வி­ய­லு­டன் சொல்­லும் படம் 'லத்தி'. நாய­கன் விஷால், நாயகி சுனைனா உட்­பட அனை­வ­ருமே சிறப்­பாக நடித்­ததாகப் பாராட்­டு­கிறார் இயக்­கு­நர் வினோத்­கு­மார்.

சாதா­ரண காவ­லரை எப்­படி நாய­க­னாக சித்­தி­ரிக்க முடி­யும் என்று பல­ரும் கேட்­கி­றார்­க­ளாம்.

"நம்­மு­டைய வாழ்க்­கை­யில் இருந்து ஒரு கதை அல்ல, ஆயி­ரம் கதை­கள் எடுக்க முடியும். இது ஒரு காவ­ல­ரின் கதை, அவ்­வ­ள­வு­தான்.

"கதா­நா­ய­க­னின் வாழ்க்­கை­யில் சில விஷ­யங்­கள் நடக்­கின்­றன. அதன் கார­ண­மாக அவர் வெகுண்டு எழு­கி­றார். அவ­ரது எதி­ரி­க­ளுக்கு எவ்­வாறு பாடம் புகட்­டு­கி­றார் என்­பதை சுவா­ர­சி­ய­மான திரைக்­கதை விவ­ரிக்­கும்.

"பொது­வாக ஒரு கதா­பாத்­தி­ரத்தை அதன் இயல்பு கெடா மல் அப்­ப­டியே திரை­யில் காட்டும்­போது கச்­சி­த­மாக அமை­யும். 'லத்தி' படம் அப்­ப­டித்­தான் உரு­வாகி உள்­ளது," என்­கி­றார் வினோத்­கு­மார்.

மிரு­கங்­க­ளுக்கு இருக்­கும் குணம்­தான் நாய­க­னி­டம் வெளிப்­ப­டு­மாம். அதை தனது நடிப்­பில் பக்­கு­வ­மா­க­வும் பொருத்­த­மா­கவும் வெளிப்­ப­டுத்தி உள்­ளா­ராம் விஷால்.

"சாதா­ரணமாக ஒரு பாம்பு சிங்­கத்தை பார்த்­த­தும் சீறும். சிங்­கத்தை பாம்பு எப்­படி தோற்­கடித்து உயிர் பிழைத்­தது என்­பது வியப்பாக இருக்­கும். வெறும் வார்த்­தை­யில் சொல்லும்­போது சாதா­ர­ணமாக இருக்­கும். உண்மை­யில் சிங்­கத்தை பாம்பு வீழ்த்­திய கதையை 'லத்தி' படத்­தில் பார்க்­க­லாம்.

"பொது­வாக இயக்­கு­நர் என்­ப­வர் ஒரு படத்­துக்கு அணித்தலை­வர் மாதிரி. அவர்­தான் எல்­லா­ரை­யுமே வழி­ந­டத்­து­வார். விஷால் சார் அடிப்­ப­டை­யில் இயக்­கு­நர்­களுக்கு மரி­யாதை தரக்­கூ­டி­ய­வர். எப்­ போதுமே இயக்­கு­நர் பாலா குறித்து வியந்து சொல்­லிக்­கொண்டே இருப்­பார். விஷா­லும் இயக்­கு­நர் துறை­யி­லி­ருந்து தன்­னு­டைய சினிமா வாழ்க்­கை­யைத் தொடங்­கி­ய­வர். இப்­போது அவர் 'துப்­ப­றி­வா­ளன் 2' படத்தை இயக்­கு­கி­றார். அத­னால் இயக்­கு­ந­ரின் சிர­மங்­கள் அவ­ருக்­குத் தெரி­யும்.

"மேலும் சண்­டைக் காட்­சி­களில், மிக ஆபத்­தான சூழ­லில், துணிச்­ச­லாக நடித்­தார். மற்­ற­படி ஏதா­வது ஆலோ­சனை­களைச் சொல்­வார். எனது பணி­யில் அவர் தலை­யிட்­டதே கிடை­யாது. காட்­சிக்கு என்ன தேவையோ அந்த நடிப்பை மட்­டும் குறை­வின்றி வழங்­குவார்.

"ராஷ்­மிகா, பூஜா ஹெக்டே ஆகி­யோரை ஒதுக்­கி­விட்டு சுனை­னாவை ஒப்­பந்­தம் செய்­தது ஏன் என்­றும் கேட்­கி­றார்­கள். கதைக்­குப் பொருத்­தமாக இருந்­த­தால் சுனைனா வந்­தார். மிகச் சிறப்­பாக நடித்­தார். அர்ப்­ப­ணிப்­பு­டன் வேலை செய்­பவர். முதல் நாளே தனக்­கான வச­னங்­களைக் கேட்­டுப் பெறு­வார். ஏன் சுனைனா என்று கேட்­ட­வர்களுக்கு மத்­தி­யில் 'சுனை­னா­வைப் பார்க்க வாருங்­கள்' என்­பது மாதிரி நடிப்­பில் மிரட்டி உள்­ளார். கதைப்­படி, அவர் 6 வயது குழந்­தைக்குத் தாய். விஷால், சுனைனா உடல்­மொ­ழி­யும் கச்­சி­த­மாக அமைந்­துள்­ளது. அவர் விருதுக்கு தகுதியான நடிகை," என்கிறார் இயக்குநர் வினோத்குமார்.

, :

  

விஷால்