'வெந்து தணிந்தது காடு': காத்திருக்கும் சூர்யா

'வெந்து தணிந்தது காடு': காத்திருக்கும் சூர்யா

1 mins read
f86ec13a-1333-4fd6-96cb-a9114edffdb2
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு, சித்தி இட்னானி. -

கௌதம் மேனன் இயக்­கத்­தில் சிம்பு நடித்­துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் நன்­றாக உள்­ள­தாக சமூக ஊட­கங்­களில் ரசி­கர்­கள் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

எனவே 'மாநாடு' படத்­தைப் போன்று இது­வும் வசூ­லில் சாதிக்­கும் என சிம்பு ரசி­கர்­கள் தெரி­வித்­துள்­ளனர்.

படம் குறித்த நல்ல கருத்­து­களைக் கேட்டு மகிழ்ச்­சி­ய­டைந்­த­தா­க­வும் இந்­தப் படத்­தைக் காண ஆவ­லு­டன் காத்­தி­ருப்­ப­தா­க­வும் பதி­விட்டு படக்­கு­ழு­விற்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ளார் சூர்யா.

முன்­ன­தாக படத்தை வெளி­யிடு­வ­தில் கடைசி நேரத்தில் சிக்­கல் ஏற்­பட்­டது. எனி­னும் தயா­ரிப்­புத் தரப்பு மேற்­கொண்ட முயற்­சி­களை அடுத்து குறித்த நேரத்­தில் படம் வெளி­யா­னது.

உல­கெங்­கி­லும் 600க்கும் மேற்­பட்ட திரை­ய­ரங்­கு­களில் 'வெந்து தணிந்­தது காடு' படம் வெளி­யீடு கண்ட நிலை­யில், தமி­ழ­கத்­தி­லும் குறிப்­பிட்ட சில வெளி­நா­டு­க­ளி­லும் மட்­டும் நேற்று அதி­காலை வேளை­யில் சிறப்­புக் காட்சி திரை­யி­டப்­பட்­டது. சிம்பு ரசி­கர்­கள் திர­ளாக வந்து படத்­தைக் கண்டு ரசித்­துப் பாராட்டினர்.

முத்து என்­கிற 19 வயது இளைஞன் ஒரு விபத்து கார­ண­மாக பிழைப்பு தேடி மும்­பைக்­குச் செல்­கி­றான். அங்கு எதிர்­பா­ராத வித­மாக குண்­டர் கும்­ப­லி­டம் சிக்­கிக்கொள்­ளும் நாய­கன், பின்­னர் தாமே அத்­த­கைய கும்­ப­லில் ஒரு­வராக மாற நேரி­டு­கிறது என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை.

இதில், சித்தி இத்­னானி நாயகி­யா­க­வும் ராதிகா சரத்­கு­மார் நாய­க­னுக்கு அம்­மா­வா­க­வும் நடித்­துள்­ளனர். இசை ஏ.ஆர்.ரகு­மான்.