நடிகர் அஜித் அண்மைய சில தினங்களாக இந்தியாவின் பனிபடர்ந்த எல்லைப் பகுதியான லடாக்கில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் சிலர் அவரை லடாக்கில் பின்தொடர்ந்து, ஒரு கட்டத்தில் அவரை நெருங்கிவிட்டனர்.
அந்த ரசிகர்களிடம், 'நான் என்ன திருடனா, எதற்காகப் பின்தொடர்கிறீர்கள்?' என அஜித் கிண்டலாகக் கேட்டு, பிறகு இயல்பாக உரையாடும் காணொளிப்பதிவு ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இந்த உரையாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

