தமன்னா பட நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
தென்னிந்திய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா.
அவரது நடிப்பில் உருவாகி உள்ள 'பப்ளி பவுன்சர்' படம் எதிர்வரும் 23ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்நிலையில், தனது சமூக ஊடகங்களில் சில கவர்ச்சிப் படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார் தமன்னா. மேலும், 'பப்ளி பவுன்சர்' படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அவரைப் படமெடுக்க செய்தியாளர்கள் குவிந்தனர். அவர்களுக்கு 'போஸ்' கொடுக்க தமன்னா முன்வந்தபோதும், உடன் வந்த பாதுகாவலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தமன்னாவின் பாதுகாவலர்கள் செய்தியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

