ஒரே நாளில் வெளியீடு காணும் ஏழு புதிய படங்கள்

ஒரே நாளில் வெளியீடு காணும் ஏழு புதிய படங்கள்

1 mins read
c118d2c2-150e-4c83-9015-998281221673
'குழலி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

கொரோனா நெருக்­க­டி­யில் இருந்து மீண்ட பிறகு தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­ன­ரின் சுறு­சு­றுப்பு அதி­க­ரித்­துள்­ளது. அதன் பல­னாக வாரந்­தோ­றும் குறைந்­த­பட்­சம் நான்­கைந்து படங்கள் வெளி­யீடு காண்­கின்­றன.

இந்­நி­லை­யில் செப்­டம்­பர் 23ஆம் தேதி ஏழு திரைப்­ப­டங்­கள் வெளி­யாக உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

செப்­டம்­பர் 30ஆம் தேதி மணி­ரத்­னம் இயக்­கிய 'பொன்­னி­யின் செல்­வன்' வெளி­யாக உள்­ளது. அதற்கு முந்­தைய நாள், அதா­வது செப்­டம்­பர் 29ஆம் தேதி தனுஷ் நடித்த 'நானே வரு­வேன்' படம் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இதற்­கி­டையே, எதிர்­வ­ரும் வெள்­ளிக்­கி­ழமை, செப்­டம்­பர் 23ஆம் தேதி குறைந்த செல­வில் உரு­வாகி உள்ள ஏழு படங்­கள் வெளி­யா­கக்­கூ­டும்.

'ஆதார்', 'பபூன்', 'ரெண்­ட­கம்', 'ட்ரிக', 'ட்ராமா', 'கெத்­துல', 'குழலி' ஆகிய படங்­கள் வெளி­யீடு காண காத்­தி­ருக்­கின்­றன.