உலகின் ஆக உயரமான கட்டடத்தில் தமது கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார் நயன்தாரா.
அக்கட்டட வளாகத்தில் மூன்று பெரிய கேக்குகள் வைக்கப்பட்டிருந்தன. இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் இதில் பங்கேற்றனர்.
முதலாவது கேக்கில் 'இனிய பிறந்தநாள் மகனே' என்றும் இரண்டாவது கேக்கில் 'இனிய பிறந்தநாள் விக்கி சார்' என்றும் மூன்றாவது கேக்கில் 'இனிய பிறந்தநாள் உலகம்' என்றும் எழுதப்பட்டு இருந்தது.
இதில் உலகம் எனக் குறிப்பிட்ட கேக், நயன்தாரா சார்பில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த ஏற்பாடுகள் தம்மை நெகிழ வைத்ததாகச் சொல்கிறார் விக்னேஷ் சிவன்.
"அன்பான மக்களுடன் ஒரு மறக்கமுடியாத பிறந்தநாள். இதைவிடச் சிறப்பாகக் கொண்டாட முடியாது. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் (நயன்தாரா) எனக்குக் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக எப்போதும் கடவுளுக்கு நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

