'அரசியல் படம் எடுக்க மிகுந்த துணிச்சல் வேண்டும்'

'அரசியல் படம் எடுக்க மிகுந்த துணிச்சல் வேண்டும்'

2 mins read
5cc96a58-f4d8-406a-8880-e1783796d511
'பபூன்' படத்தில் வைபவ், அனகா. -

அர­சி­யல் படம் எடுக்க துணிச்­சல் வேண்­டும் என்­கி­றார் இயக்­கு­நர் அசோக் வீரப்­பன். இவ­ரது இயக்கத்­தில் உரு­வாகி உள்­ள படம் 'பபூன்'.

வைபவ் நாய­க­னா­க­வும் அனகா நாய­கி­யா­க­வும் நடித்­துள்­ள­னர்.

"இதற்கு முன்பு 'பீட்சா', 'ஜிகர்­தண்டா', 'இறைவி' ஆகிய படங்­களில் கார்த்­திக் சுப்­பு­ரா­ஜி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்றி உள்­ளேன். அந்த அனு­ப­வம் கொடுத்த துணிச்­ச­லில்­தான் தனி­யாக ஒரு படத்தை இயக்­கி­ உள்­ளேன்.

"மேடை நாட­கங்­களில் பங்­கேற்­கும் கோமா­ளி­க­ளின் வாழ்க்­கையை மைய­மாக வைத்து திரைக்­கதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் படத்­தில் சிவ­கங்கை, ராம­நா­த­பு­ரம், தூத்­துக்­குடி ஆகிய மாவட்­டங்­களில் உள்ள மக்­க­ளின் வாழ்­வி­ய­லை­யும் பேசி­யுள்­ளோம்.

"நகைச்­சுவைப் பட­மாக இருக்­குமோ என்று யோசிக்க வேண்­டாம். மாறாக, இது அதி­ர­டி­யான அர­சி­யல் படம். ஆலங்­குடி இளை­ய­ராஜா, மதுரை எம்.பி.விஸ்­வ­நா­தன், மலை­யாள நடி­கர் ஜோஜு ஜார்ஜ், ஆடுகளம் நரேன் ஆகி­யோர் முக்­கிய வேடங்­களில் நடித்­துள்­ள­னர். காரைக்­குடி, ராமே­சு­வ­ரம், கொல்­லம், சென்னை ஆகிய இடங்­களில் படம் வளர்ந்துள்­ளது. தமிழ்த் திரை­யு­ல­கில் எப்­போ­தா­வ­து­தான் முழு நீள அர­சி­யல் கதை­யம்­சம் உள்ள படம் வரும். அரசி­யல் கதை­யைச் சொல்ல துணிச்­சல் வேண்­டும்," என்­கி­றார் இயக்கு­நர் அசோக் வீரப்­பன்.

படத்­தின் நாய­கன் வைபவ், அர­சி­ய­லைக் கதைக்­க­ள­மா­கக் கொண்ட படத்­தில் நடிப்­பது வித்­தி­யா­ச­மான அனு­ப­வ­மாக உள்­ளது என்­கி­றார்.

"இது­போன்ற கதை­களில் நடிப்­பது ஒரு வகை­யில் நமக்­கான சவால் என்­றும் சொல்­ல­லாம். மிக நேர்த்­தி­யான பட­மாக இதை உரு­வாக்­கு­கிறார் அசோக் வீரப்­பன். அவர் மீதுள்ள நம்­பிக்­கை­யால் இப்­ப­டத்­தில் நடிக்­கி­றேன்," என்­கி­றார் வைபவ்.

இப்படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.