'பெட்ரோல் நிலையம், மருந்து கடையில் வேலை பார்த்தேன்'

'பெட்ரோல் நிலையம், மருந்து கடையில் வேலை பார்த்தேன்'

2 mins read
5d341453-10fd-4610-873d-3499e8bd72f7
ஜெயபிரகாஷ் (இடது), விஜய் சேதுபதி. -

இன்று தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மான குணச்­சித்­திர, வில்­லன் நடி­கர் ஜெய­பி­ர­காஷ், ஒரு காலத்­தில் பெட்­ரோல் நிலை­யம், மருந்துக் கடை என கிடைத்த இடங்களில் எல்லாம் வேலை­யைச் செய்­த­தா­கச் சொல்­கி­றார்.

இவ­ரது சொந்த ஊர் சீர்­காழி. பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்­வில் இவர் தேர்ச்சி பெற மாட்­டார் என நண்­பர்­களும் குடும்­பத்­தா­ரும் கருதிய நிலை­யில், எப்­ப­டியோ கரை­சேர்ந்­து­விட்­டார்.

"19 வய­தில் ஊரில் உள்ள மருந்துக் கடை­யில் வேலை பார்த்­தேன். கார­ணம், கடை­யில் வேலை பார்த்­தால் வியா­பார நுணுக்­கங்­களைக் கற்­றுக்கொண்டு, நாமும் எதிர்­கா­லத்­தில் ஒரு மருந்­துக் கடையைத் திறக்­க­லாம் என்ற ஆசை­தான்.

"பிறகு சென்­னைக்­குப் புறப்­பட்­டேன். அங்கு என் அக்கா இருந்­த­தால், நம்­பிக்­கை­யு­டன் சென்­றேன். சென்­னை­யில் சில காலம் பெட்­ரோல் நிலை­யத்­தில் வேலை பார்க்­கும் வாய்ப்பு கிடைத்­தது. பின்னாள்­களில் நானே சொந்­த­மாக ஒரு பெட்­ரோல் நிலை­யத்தை நடத்­தி­னேன். படங்­களும் தயா­ரித்­தேன்.

"பொரு­ளி­யல் ரீதி­யில் மெல்ல வளர்ச்சி கண்ட நிலை­யில், நண்­பர்­கள் சிலர் படத் தயா­ரிப்­பில் ஈடு­படும்­படி அறி­வு­றுத்­தி­னர். ஏதோ ஒரு துணிச்­ச­லு­டன் படத்­த­யா­ரிப்­பா­ளராக மாறி­னேன். 25 வய­தில் எனக்­குத் திரு­ம­ண­மா­கி­விட்­டது. மனைவி ஆங்­கிலோ இண்­டி­யன். இரண்டு மகன்­களில் ஒருத்­தர் ஆட்­டோ­மொ­பைல் துறை­யில் சிறப்­பா­கச் செயல்­ப­டு­கி­றார். இன்­னொரு மகன் சினி­மா­வில் வாய்ப்­புக்­காக முயற்சி செய்து வரு­கி­றார்.

"நல்ல திரைப்­ப­டம், அடுத்து பத்து பட வாய்ப்­பு­க­ளைக் கொடுக்­கும் என்­பது என் விஷ­யத்­தில் உண்­மை­யா­னது. எனது முதல் படம் 'மாயக்­கண்­ணாடி'. பி­றகு 'பசங்க', 'நாடோ­டி­கள்' என ஆரம்­ப­கால படங்­கள் பல எனக்­குப் பெயர் வாங்­கிக்கொடுத்­தன. அதன் பிறகு வந்த படங்­க­ளி­லும் நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தன.

"நாங்கள் தயாரித்த 'பொற்காலம்' படம் உருவானபோது இயக்குநர் சேரன் சார் என்னைக் கவனித்துள் ளார். என்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை முதலில் கண்ட றிந்தவர் அவர்தான்," என்கிறார் ஜெயபிரகாஷ்.