வாணிஸ்ரீயின் நிலத்தை மீட்ட அரசு

1 mins read
98072607-13cc-42df-930e-e3147628989a
-

பழம்­பெ­ரும் நடிகை வாணி­ஸ்ரீ­யின் 20 கோடி ரூபாய் மதிப்­புள்ள நிலத்தை மீட்­டெ­டுத்து அவ­ரி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளது தமி­ழக அரசு. இதற்­காக முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்கு அவர் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

போலி பத்­தி­ரப்­ப­திவு மூலம் வேறொருவர் வாணி­ஸ்ரீ­யின் நிலத்தை முன்பு அப­க­ரித்­துக் கொண்­டார்.

தமி­ழில் 'வசந்த மாளிகை', 'வாணி ராணி' உள்­ளிட்ட படங்­களில் நடித்­த­வர் வாணி­ஸ்ரீ. தமிழ் மட்­டும் இன்றி தெலுங்கு, கன்­ன­டம், இந்தி உள்­ளிட்ட பல்­வேறு மொழி­க­ளி­லும் நடித்து, ரசி­கர்­கள் மன­தில் நீங்­காத இடம் பிடித்­த­வர்.

இவ­ருக்­குச் சொந்­த­மான சுமார் இரண்­டா­யி­ரம் சதுர அடி நிலத்தை ஒரு­வர் போலி ஆவ­ணங்­கள் மூலம் பறித்­துக்கொண்­ட­தா­கப் புகார் எழுந்­தது.

அது தொடர்­பான விசா­ரணை நடை­பெற்று வந்த நிலை­யில், போலி பத்­தி­ரப்­பதிவை ரத்து செய்­யும் புதிய நடை­மு­றையை அமல்­ப­டுத்தி உள்­ளது தமி­ழக அரசு.

அதன் மூலம் வாணி­ஸ்ரீ­யின் நிலம் மீட்­கப்­பட்­டுள்ளது.