தமிழ்ச் சினிமாவின் அண்மைய பிரம்மாண்டப் படைப்புகளைத் தயாரித்துள்ள லைக்கா நிறுவனம்தான் 'பொன்னியின் செல்வன்' படத்தையும் தயாரித்துள்ளது.
இப்படத்தின் மொத்த செலவு 450 கோடி ரூபாயில் அடங்கிவிட்டது என்று கூறப்படுவது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அசர வைத்துள்ளது.
120 நாள்களில் மொத்த படத்தையும் இரு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். 'பாகுபலி' படத்துக்கு இதைவிட அதிக செலவும் காலமும் ஆனதாக சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் நேற்று 'பொன்னியின் செல்வன்' படம் வெளியீடு கண்டது. முதல் நாள் வசூல் ஐம்பது கோடி ரூபாய் என்கிறார்கள்.
முதல் பாகத்தின் மொத்த வசூல் 700 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகமும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி.