திரிஷா: மணமுறிவு செய்துகொள்வதில் நம்பிக்கை இல்லை

திரிஷா: மணமுறிவு செய்துகொள்வதில் நம்பிக்கை இல்லை

2 mins read
a13669ca-ca2f-48cd-9c11-ae49a283e36b
படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மணிரத்னம், திரிஷா. -

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் மூலம் ரசி­கர்­களும் ஊட­கங்­களும் தன்­னைப் பற்றி மீண்­டும் பேசத்­தொ­டங்கி இருப்­பது உற்­சா­கம் அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் திரிஷா.

தமது எதிர்­கா­லத் திட்­டங்­கள், திரு­ம­ணம் குறித்­தெல்­லாம் சிலர் தேவை­யின்றி விசா­ரிப்­ப­தும் எரிச்ச லூட்­டும் வகை­யில் கேள்­வி­கள் எழுப்­பு­வ­தும் தமக்கு அறவே பிடிக்­க­வில்லை என்­றும் அண்­மைய பேட்டி­யில் அவர் தெரி­வித்­துள்­ளார்.

மேலும் திரு­ம­ணத்­துக்­குப் பின்­னர் மணமுறிவு செய்துகொள்ளும் தமக்குப் பிடிக்­காது என்­கி­றார்.

"நான் ஏன் இது­வரை திரு­ம­ணம் செய்து கொள்­ள­வில்லை என்று நிறைய பேர் கேட்­கி­றார்­கள். அவர்­கள் அவ்­வாறு கேட்­கும் விதம் எனக்கு சுத்­த­மா­கப் பிடிக்­க­வில்லை.

"எப்­போது திரு­ம­ணம் செய்து கொள்ள வேண்­டும் என நினைக்­கி­றீர்­கள் என்று சாதா­ர­ண­மாக கேட்­டால் மட்­டுமே என்­னி­டம் இருந்து உங்­க­ளுக்கு பதில் கிடைக்­கும்," என்­கி­றார் திரிஷா.

எப்­போது திரு­ம­ணம் என்­பது குறித்து தாமே இன்­னும் முடிவு செய்­ய­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அது­கு­றித்து எந்­த­வித திட்டமும் தமக்­கில்லை என்­கி­றார்.

"உண்­மை­யில் எனது திரு­ம­ணம் குறித்து இது­வரை எந்­தத் திட்­ட­மும் இல்லை. அது யாரோடு நான் முழுமை­யாக இருப்­ப­தாக உணர்­கிறேன், எனக்கு யாரைப் பிடிக்­கிறது என்­பதைப் பொறுத்து இருக்­கிறது.

"வாழ்­நாள் முழு­வ­தும் நான் சேர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய மனி­தர் இவர்தான் என்று எனக்­குத் தோன்ற வேண்டும். அப்­போ­து­தான் திரு­ம­ணம் குறித்து யோசிக்க இய­லும்," என்­கி­றார் திரிஷா.

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு பிரிந்து வாழ்­வது, மணமுறிவு செய்துகொள்­வது போன்ற செயல்­கள் தமக்­குப் பிடிக்­காது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அது­போன்ற வாழ்க்­கையைத் தாம் விரும்­ப­வில்லை என்­கி­றார்.

"எனக்கு மணமுறிவு மீது நம்பிக்கை இல்லை. திரு­ம­ணம் ஆன பிறகு மணமுறிவு செய்துகொள்வது தேவையற்றது.

"மணமுறிவு மூல­மாக சம்­பந்­தப்­பட்ட இரு­வ­ருக்கு எந்­த­வித பய­னும் இல்லை என்று நினைக்­கி­றேன். பலரைப் பார்த்து இதைப் புரிந்து கொண்டுள்ளேன்.

"என்­னைச் சுற்றி இருக்­கும் நிறைய பேர் திரு­ம­ண­மான பிறகு மன­நி­றைவு இன்றி தவிக்­கி­றார்­கள். அத்­த­கைய தவிப்பை ஏற்க நான் தயா­ரில்லை. அது­போன்ற திரு­மண பந்­தம் எனக்கு வேண்­டாம்," என்­கி­றார் திரிஷா.

தற்­போது நாற்­பது வய­தைக் கடந்து­விட்ட போதி­லும், மூத்த கதா­நா­ய­கி­க­ளின் பட்­டி­ய­லில் திரிஷா பெயர் இன்­னும் நீடித்து வரு­கிறது.

இரு­பது ஆண்­டு­கால சினிமா பய­ணத்­தில் பல்­வேறு ஏற்ற இறக்­கங்­க­ளைச் சந்­தித்­துள்ள போதி­லும் இன்­ன­மும் தமிழ் ரசி­கர்­கள் தம்­மைக் கொண்­டா­டு­வது மகிழ்ச்சி அளிக்­கிறது என்­கி­றார் திரிஷா.