தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பாகுபலி-3': இயக்குநர் ராஜமவுலி சூசகம்

1 mins read
22839ad5-8838-43c9-87fb-5440b89e7f5a
'பாகுபலி' படத்தின் சுவரொட்டியில் ராணா டகுபதி, பிரபாஸ், சத்யராஜ். -

'பாகு­பலி' படத்­தின் மூன்­றாம் பாகத்­தைப் பார்க்க ஆவ­லு­டன் இருப்­ப­தாக ரசி­கர்­கள் தொடர்ந்து சமூக ஊட­கங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் அவர்­க­ளுக்கு நல்ல சேதியை மறை­மு­க­மா­கத் தெரி­வித்­துள்­ளார் இயக்­கு­நர் ராஜ­ம­வுலி.

மூன்­றாம் பாகம் குறித்து மிக விரை­வில் முக்­கிய அறி­விப்பு வெளி­யா­கும் என்று அவர் கூறி­யுள்­ளார்,

"'பாகு­பலி' படத்­தின் மூன்­றாம் பாகத்தை எடுப்­பது காலத்­தில் கையில் உள்­ளது. இரண்­டாம் பாகத்­தின் இறு­திக்­காட்­சி­யில் மூன்­றாம் பாகத்­துக்­கான தொடர்பு இருக்­கும்.

"எனக்­கும் அடுத்த பாகத்தை இயக்­கும் ஆர்­வம் உள்­ளது. எனி­னும், பாகு­பலி போன்ற பிரம்­மாண்­ட­மான படைப்­பு­க­ளு­டன் பய­ணம் செய்­வது அவ்­வ­ளவு எளி­தான விஷ­யம் அல்ல.

"நாம் தீட்­டும் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்த காலத்­தின் ஒத்­து­ழைப்­பும் தேவைப்­ப­டு­கிறது. எனி­னும், இது தொடர்­பான நல்ல அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கக்­கூ­டும்," என்று ராஜ­ம­வுலி தெரி­வித்­துள்­ளார்.

இத­னால் அவ­ரது ரசி­கர்­கள் உற்­சா­கத்­தில் உள்­ள­னர்.

ராஜ­ம­வுலி இயக்­கத்­தில் பிர­பாஸ், ராணா, சத்­ய­ராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்­ணன் ஆகி­யோர் நடிப்­பில் உரு­வான 'பாகு­பலி' படத்­தின் இரண்டு பாகங்­களும் உலக அள­வில் சுமார் இரண்­டா­யி­ரம் கோடி ரூபாய் வசூ­லைப் பெற்றன. இந்­திய திரைப்­ப­டங்களில் ஆக அதி­க­மான வசூலைப் பெற்ற படம் இது­தான்.