'விட்டுக்கொடுத்து நடித்த சசிகுமார், சரத்குமார்'

'விட்டுக்கொடுத்து நடித்த சசிகுமார், சரத்குமார்'

3 mins read
6e333109-4f74-456f-9bf8-eb7fd34c3f0e
''நா நா' படத்தில் சசிகுமார், சித்ரா சுக்லா. -

'நா நா' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பில் உரு­வா­கும் படத்தை இயக்­கு­கி­றார் என்.வி.நிர்­மல்­கு­மார். விஜய் ஆண்­ட­னியை வைத்து இவர் இயக்­கிய 'சலீம்' படத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தது.

அடுத்து 'சது­ரங்க வேட்டை' படத்­தின் இரண்­டாம் பாகத்தை இயக்­கி­யுள்ள நிலை­யில், சசி­கு­மார், சரத்­கு­மார் ஆகிய இரு­வ­ரை­யும் வைத்து 'நா நா' படத்தை இயக்கி வரு­கி­றார் என்.வி.நிர்­மல்­கு­மார்.

"இது இரட்டை கதா­நா­ய­கர்­களை மைய­மாக வைத்து உரு­வாக்­கப்­பட்­டுள்ள கதை. யாரை நடிக்க வைக்­க­லாம் என்று யோசித்­த­போது சரத்­கு­மா­ரும் சசி­கு­மா­ரும் நடித்­தால் நன்­றாக இருக்­கும் என்று தோன்­றி­யது.

"இந்த எண்­ணம் தோன்­றிய அந்த நொடி­யில் தொடங்கி இது­வரை தொடர்ந்து திட்­ட­மிட்டு வேலை பார்த்­த­தன் பயனாக இன்று நல்­ல­தொரு படைப்பை உரு­வாக்கிய மன­நி­றை­வு­டன் பேச முடி­கிறது," என்­கி­றார் நிர்­மல்­கு­மார்.

கடைக்­கோடி கிரா­மத்­தில் வசிக்­கும் ஓர் எளிய மனி­தனை இந்­தச் சமூ­கம் எப்­படி உரு­மாற்­று­கிறது என்­ப­து­தான் கதை­யின் ஒரு வரிச் சுருக்­க­மாம். சசி­கு­மார் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் நா.நாரா­ய­ணன். அதைச் சுருக்கி, 'நா நா' என்று தலைப்பு வைத்­துள்­ள­னர்.

"ஒரு சக்­தியை ஆக்­கவோ அழிக்­கவோ முடி­யாது. வேண்­டு­மா­னால் அதை உரு­மாற்­ற­லாம். அப்­படி உரு­மாற்­றப்­பட்ட ஒரு­வ­னின் வாழ்க்­கைக் கதை­தான் இந்­தப் படம். சசி­கு­மார் இப்­படி ஒரு கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தது கிடை­யாது.

"மேலும், படத்­தில் காதல் காட்சி­களோ பாடல்­களோ இடம்­பெ­ற­வில்லை.

"ஏற்­கெ­னவே தெலுங்­கில் அறி­மு­க­மா­ன­வரை தமி­ழுக்கு அழைத்து வந்­துள்­ளோம். இவர்­க­ளைத் தவிர, பார­தி­ராஜா, டெல்லி கணேஷ், மயில்­சாமி, ரமா உள்­ளிட்ட பலர் முக்­கிய பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். ஹர்­ஷ­வர்த்­தன் என்ற இசை­ய­மைப்­பா­ளரை அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றோம்.

"தெலுங்குப் படங்களில் நடித் துள்ள சித்ரா சுக்லா என்பவர்தான் இப்படத்தின் நாயகி.

"ஒரு­வர் திடீ­ரென எந்­தக் கார­ண­மும் இல்­லா­மல் தேடி வந்து உதவி செய்­தால், அவ­ரைச் சந்­தேகப்­பட வேண்­டும் என்ற ஆழமான தக­வல் ஒன்­றை­யும் இந்­தப் படத்­தின் வழி ரசி­கர்­க­ளி­டம் தெரிவிக்க முயன்­றுள்­ளோம்," என்­கி­றார் நிர்மல்­கு­மார்.

இந்­தக் கதை­யைக் கேட்­ட­தும் நாய­கன் சசி­கு­மார் வியப்­ப­டைந்­தா­ராம். இப்­ப­டி­யொரு கதையை ரசி­கர்­க­ளுக்­குச் சொல்ல வேண்­டும் என்ற எண்­ணம் ஏன் தோன்­றி­யது என்று பல­முறை கேட்டு விளக்­கம் பெற்­றா­ராம்.

"இது அவ­ரு­டைய படம் என்பது­தான் சரி. கதைப்­படி மும்­பைக்­குச் செல்­லும் கதா­நா­ய­க­னுக்கு அங்கு என்ன நடக்­கிறது என்­பதை தொடக்­கம் முதல் இறு­தி­வரை விறு­வி­றுப்பு குறை­யா­மல் சொல்­லப் போகி­றோம்.

"சரத்­கு­மா­ரி­டம் கதை­யைச் சொல்லி முடித்த அடுத்த நிமி­டமே, 'படப்­பி­டிப்­புக்கு கிளம்ப நான் தயார்' என்­றார். காவல்­துறை அதி­கா­ரி­யாக மிகக் கச்­சி­த­மாக நடித்­துள்­ளார்.

"சரத்­கு­மார் மீது மிகுந்த மரி­யாதை வைத்­துள்­ளார் சசி­கு­மார். இரு­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் விட்­டுக்­கொ­டுத்து நடித்­த­னர்.

"கதை பட­மாக்­கப்­பட்ட விதம் மன­நி­றைவு அளிப்­ப­தாக இரு­வ­ரும் கூறி­னர். அத­னால் எனக்கு மன­நி­றை­வும் நிம்­ம­தி­யும் ஏற்­பட்­டது.

"என் குரு­நா­தர் பார­தி­ராஜா. அவ­ரு­டன் 'ஈர­நி­லம்' படம் தொடங்கி 'பொம்­ம­லாட்­டம்' வரை பணி­யாற்றி­னேன். 'நா நா' திரைப்படம் ஒரு நடி­க­ரா­க­வும் அவ­ருக்­குப் பெயர் வாங்­கித் தரும்," என்­கி­றார் இயக்குநர் நிர்­மல்­கு­மார்.

'நா நா' படத்­தின் வெளி­யீடு குறித்து மிக விரை­வில் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கு­மாம்.