தூக்கம் கெடுப்பார் மரியா

தூக்கம் கெடுப்பார் மரியா

3 mins read
39347b98-3d0c-430e-9f92-94c158f0e7c3
-

காத­லும் நகைச்­சு­வை­யும் நிறைந்த படைப்­பாக உரு­வாகி உள்ளது 'ப்ரின்ஸ்' திரைப்­ப­டம். தெலுங்கு ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்ள அனு­தீப் தமி­ழில் இயக்­கி­யுள்ள முதல் படம் இது.

தேவை­யற்ற கவர்ச்சி, வீண் வன்­முறை என்று முகம் சுளிக்க வைக்­கும் எந்­த­வொரு அம்­ச­மும் தன் படத்­தில் இருக்­காது என்று இப்­போதே உத்­த­ர­வா­தம் அளிப்­ப­தா­க­வும் 'ப்ரின்ஸ்' குடும்­பத்­து­டன் திரை­ய­ரங்கு சென்று ரசிக்­கும் படைப்­பாக இருக்­கும் என்­றும் கூறு­கி­றார்.

அன்­றாட வாழ்க்­கை­யில் தேவை­யற்ற பதற்­றத்­துக்­கும் கோபத்­துக்­கும் இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்­ப­வர், எப்­போதுமே சிரித்த முகத்­து­டன் இருப்­ப­வர்­க­ளால் நிறைய சாதிக்க முடி­யும் என்­பதை இந்­தப் படம் வலி­யு­றுத்­தும் என்­கி­றார்.

"காத­லுக்கு எல்­லையே இல்லை என்று சொல்­கி­றோம். அந்­தக் காதல் எப்­போது மன­தில் தோன்­றும், எப்­போது வெளிப்­படும் என்­பதை யாரா­லும் கணிக்க இயலாது.

"தமிழ்­நாட்­டுப் பைய­னுக்­கும் பிரிட்­டிஷ் பெண்­ணுக்­கும் இடையே காதல் மலர்­கிறது. அந்த உறவு திரு­ம­ணத்­தில் முடி­யும்­போது ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்சி­னை­கள் என்ன, அவற்­றுக்கு எவ்­வாறு தீர்வு காண்­பது என்­ப­து­தான் கதைக்கரு. துரத்­தித் துரத்திக் காத­லிக்­கும் ஒரு ஜோடி­யின் கதை இது. காத­லிப்­ப­தில் தவறில்லை. ஆனால் வாழ்க்­கையை கோட்டை விட்டுவி­டக்­கூ­டாது. அவ்­வாறு சாதித்­துக் காட்­டும் காத­லர்­க­ளைப் பற்றி இந்­தப் படம் பேசும்," என்­கிறார் அனு­தீப்.

தாம் எழு­தி­யுள்ள கதைக்கு சிவ­கார்த்­தி­கே­யன்­தான் பொருத்­த­மாக இருப்­பார் என்­பதை முடிவு செய்த பிற­கு­தான் அவரை நேரில் சந்­தித்­தா­ராம். அப்­போது அனு­தீப் இயக்­கிய 'ஜதி ரத்­னலு' தெலுங்­குப் படம் சிறப்­பாக இருந்­த­தாக சிவா பாராட்ட, அனு­தீப் நெகிழ, படத்­தின் தயா­ரிப்­புத் தரப்பு, உட­னே படப்­பி­டிப்பை தொடங்கத் தயார் என்று களத்­தில் இறங்­கி­விட்­டது.

"இன்­றைய தேதி­யில் குழந்­தை­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை என அனைத்­துத் தரப்­பி­ன­ரை­யும் கவர்ந்­துள்ள நாய­கன் என்­றால் அது சிவாதான். எல்லாருமே அவரை ரசிக்­கின்­ற­னர். நம்­மு­டைய குடும்ப உறுப்­பி­னர் என்று சொல்­லும் வகை­யில் அனை­வ­ருக்­கும் நெருக்­க­மா­ன­வ­ராக உள்­ளார்.

"அனை­வ­ரை­யும் மகி­ழ­வும் நெகி­ழ­வும் வைக்­கும் மந்­திர சக்தி அவ­ரி­டம் இருப்­ப­தா­கக் கரு­து­கிறேன். காத­லுக்கு இணை­யாக நகைச்­சு­வைக்­கும் இடம்கொடுத்­தி­ருப்­ப­தைப் பாராட்­டி­னார். மக்­கள் இப்­போ­து­தான் இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். எனவே அறி­வுரை கூறும், வன்­மு­றை­யைத் தூண்­டும் கதைக்­க­ளம் வேண்டும் என்று தொடக்­கத்­தி­லேயே முடிவு செய்­து­விட்­டுத்­தான் பட வேலை­க­ளைத் தொடங்­கி­னேன்.

"அறி­முக நாய­க­னைப் போல் களத்­தில் பம்­ப­ர­மா­கச் சுழன்­றார் சிவா. பெரிய நாய­க­னாக உரு­வெ­டுத்த பிற­கும் முதல் படத்­தில் நடிப்­ப­து­போல் அக்­க­றை­யும் அர்ப்­ப­ணிப்­பு­மாய் அவர் செயல்­ப­டு­வது மகிழ்ச்சி அளித்­தது," என்­கி­றார் அனு­தீப்.

கதா­நா­யகி மரியா மிக அழ­காக இருப்­ப­தாக சமூக ஊட­கங்­களில் ரசி­கர்­கள் குறிப்­பி­டு­வதை தாம் அறிந்­தி­ருப்­ப­தா­கக் கூறு­ப­வர், மரி­யாவை கண்­டு­பிடிப்­ப­தற்­குள் படா­த­பாடு பட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"வெளி­நாட்டு நாய­கி­தான் தேவை என்று முடி­வா­ன­தும் அதற்­கான வேட்­டை­யைத் தொடங்­கி­னோம். தேடாத ஊர் இல்லை என்று சொல்­லும் அள­வுக்கு சல்­லடை போட்டு தேடிப்­பார்த்­தும், என் கதைக்கு ஏற்ற நாயகி கிடைக்­க­வில்லை. சமூக ஊட­கங்­க­ளி­லும் வலை­வீ­சி­னோம். ஆனால் பலன் இல்லை.

"பிறகு திடீ­ரென ஒரு­நாள் மரி­யா­வைப் பற்றி கேள்­விப்­பட்­டேன். நேரில் சந்­தித்தபோது உக்­ரே­னில் வசிக்­கி­றார் என்­பது தெரி­ய­வந்தது. அழகு, குழந்தைத்­தனம், சுட்­டித்­த­னம் என எல்லா குணா­தி­ச­ய­மும் நிறைந்த இளம் பெண்­ணாக எங்­கள் முன்­வந்து நின்­றார்.

"தமி­ழில் பேச­வும் நட­ன­மா­ட­வும் கற்­றுக் கொடுத்­தோம். எப்­ப­டி­யாவது சமா­ளித்­து­வி­ட­லாம் என்று நினைத்­தோம். அவரோ நட­னத்­தில் அசத்து­கி­றார். தமி­ழில் பேசி­னால் நன்கு புரிந்துகொள்­கி­றார்.

"கதைப்படி அவரால் சிவாவின் தூக்கம் கெடும். அதேபோல் இளையர்களின் தூக்கமும் கெட்டுப்போகும். மரியாவின் வெள்­ளந்திச் சிரிப்­பும் அழ­கும் தமிழ் ரசி­கர்­களை நிச்­ச­யம் கவ­ரும். இளை­யர்­களை அவர் பக்­கம் சாய வைக்­கும்," என்று சொல்லி குறும்­பா­கச் சிரிக்­கி­றார் அனு­தீப்.