ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பது சவாலான வேலை என்கிறார் நடிகை காஜல் அகர்வால். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகப் பதிவில், தனது குழந்தை நீலின் புகைப்படத்தை வெளியிட்டதுடன், கடந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாகக் கடந்துபோனது என்பதே தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
"என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக ஆழமான மாற்றம் இது. தாயாக நான் மாறிய பிறகு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என்னுடைய வேலைகளை வழக்கம்போல் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஒரு தாயாக சரியான நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை மகனுக்குச் சரியாக கொடுப்பது சவாலாக இருந்தது. ஆனால், அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.
"இப்போது நீ (மகன்) புரண்டு படுக்கிறாய், இடமிருந்து வலம் நகர்கிறாய், என் மேல் ஏறுகிறாய்... இதெல்லாம் ஏதோ ஓர் இரவில் நடந்ததைப் போல இருக்கிறது. உனக்கு நெற்றியில் வந்த முதல் சிறு கட்டி, நீச்சல் குளத்தில் முதன்முறையாக நீ குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது. இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய்விடுவாய் என நினைக்கிறேன். நீ என்னை அந்த அள விற்கு பொறுப்புள்ளவளாக மாற்றி இருக்கிறாய்," என்று காஜல் அகர்வால் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

