'சிவாவுக்குப் புதுப் பட்டம்'

'சிவாவுக்குப் புதுப் பட்டம்'

2 mins read
ccc63903-329b-4394-a5f3-87d1922e8de7
-

தாம் நடித்­துள்ள 'பிரின்ஸ்' படத்­தின் வெற்றி தமிழ், தெலுங்கு திரை­யு­ல­கங்­களில் பல்­வேறு மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும் எனத் தாம் உறு­தி­யாக நம்­பு­வ­தா­கக் கூறு­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

'டாக்­டர்', 'டான்' என அடுத்­த­டுத்து இரு வெற்­றிப் படங்­களைத் தந்த உற்­சா­கத்­து­டன் மூன்­றா­வது வெற்­றிக்­கா­கக் காத்­தி­ருக்­கிறது அவ­ரது தரப்பு.

முந்­தைய இரு படங்­க­ளின் வசூல் நூறு கோடி ரூபாயைக் கடந்­துள்­ளன. இந்த வெற்­றி­க­ளின் மூலம் நூறு கோடி ரூபாய் வசூல் கொண்ட கதா­நா­ய­கர்­க­ளின் பட்டியலில் சிவா­வின் பெயர் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில், 'பிரின்ஸ்' படத்­தின் வெளியீட்டு உரி­மையோ திரைகாண்­ப­தற்கு முன்­பா­கவே நூறு கோடி ரூபா­ய்க்­கும் மேல் விற்­ப­னை­யாகி உள்­ளது. இனி விநி­யோகிப்பாளர்­கள் கொடுத்த காசுக்­கும் மேல் வசூல் பெற்று­விட்­டால், சிவா­வின் திரை­யு­லக வளர்ச்சி அடுத்­த ­கட்­டத்தை எட்­டிப்பிடிக்­கும்.

இதை­ய­டுத்து அவர் அடுத்து நடித்து வரும் 'மாவீ­ரன்' படம் குறித்த எதிர்­பார்ப்பு கோடம்­பாக்க வட்­டா­ரங்­களில் மட்­டு­மல்லா­மல், தெலுங்­கு திரை­யு­ல­கி­லும் பெரும் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதற்­கி­டையே, சிவாவை அவ­ரது ரசிகர்­கள் 'பிரின்ஸ்' என்ற அடைமொழியுடன் குறிப்­பி­டத் தொடங்கி உள்­ள­னர். இது­தான் அவ­ரது பட்­டப்­பெ­ய­ராக நீடிக்குமா எனத் தெரி­ய­வில்லை.

மேலும், 'டான்' படத்­துக்­காக தாமே இயற்­றி­யுள்ள பாடல் ஒன்­றில் 'டார்­லிங் பிரின்ஸ்' என்ற வார்த்­தை­யைக் குறிப்­பிட்­டுள்­ளார் சிவா. கூட்­டிக்கழித்­துப் பார்க்­கும்­போது, ரசி­கர்­கள் தனக்கு கொடுத்­துள்ள பட்­டத்தை அவர் அங்­கீ­க­ரித்­துள்­ள­தா­கச் சுட்டிக்­காட்­டு­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்­துப் புள்­ளி­கள்.

"இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­கள் பலர் முன்பே கேட்­டு­விட்­ட­னர். உண்­மை­யில் வேறு தலைப்பு கிடைக்­கா­த­தால்­தான் 'பிரின்ஸ்' என்ற தலைப்பை தேர்வு செய்­தோம் (சிரிக்­கி­றார்).

"நிறைய தலைப்­பு­க­ளைப் பரி­சீ­லித்­தும் மன­நி­றைவு ஏற்­ப­ட­வில்லை. மேலும், ஆசி­ரி­யர்­கள் குறித்த கதை என்­ப­தால் படத்­தின் தலைப்பு அதற்­கேற்ப இருக்க வேண்­டும் என இயக்­கு­நர் விரும்­பி­னார். அது மட்­டு­மல்ல, படத்­தின் கதா­நா­ய­கிக்கு இங்­கி­லாந்­து­டன் தொடர்பு இருக்­கும்.

"ரசி­கர்­கள் பலர் என்னை சமூக ஊட­கங்­களில் 'பிரின்ஸ்' என்று குறிப்­பிட்டு வரு­வது உண்­மை­தான். இந்­தக் கார­ணங்­களை முன்வைத்தே இத்தலைப்பை தேர்வு செய்­தோம்," என்­கி­றார் சிவ­கார்த்­தி­கே­யன்.

"நான் நடித்து ஒரு படம் தீபா­வ­ளிப் பண்­டி­கை­யின்­போது வெளி­யா­வது இதுவே முதன்முறை. அத­னால் எனது உற்­சா­கத்தை வெளிப்­ப­டுத்த வார்த்தை­கள் இன்­றித் தவிக்­கி­றேன்.

"எனது படத்­துடன் 'சர்­தார்' பட­மும் வெளியாகி றது. இரு வெவ்­வேறு கதைக்­க­ளங்­கள், கதா­நா­ய­கர்­களைக் கொண்ட படங்­கள் வெளி­யா­வ­தில் மகிழ்ச்சி. சிறு வய­தில் தீபா­வளி வந்­து­விட்­டால் போதும், புதுப்­ப­டங்­கள் குறித்து தக­வல்­களை சேக­ரித்­துக்கொண்டு, அவற்றை வரி­சை­யா­கப் பார்ப்­ப­தில் ஆர்­வ­மாக இருப்­பேன்.

"இன்று வாழ்க்கை என்­னைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்­கும் இடம் நான் எதிர்­பார்த்­தி­ராத ஒன்று. நான் நடித்த படத்தை தீபா­வ­ளி­யின்­போது என் குடும்­பத்­து­டன் பார்த்து ரசிக்­கப்போகி­றேன்.

"நேர­டித் தெலுங்­குப் பட­மாக அல்­லா­மல் தெலுங்­கில் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்டு வெளி­யா­கிறது என்­ற­போ­தி­லும், ஆந்­திரா, தெலுங்­கானா மாநி­லங்­களில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யி­லான திரை­ய­ரங்­கு­களில் இந்­தப் படத்தை வெளி­யிட்டுள்­ள­னர். என் மீது தெலுங்கு விநி­யோ­கிப் பாளர்­களும் ரசி­கர்­களும் வைத்­துள்ள நம்­பிக்கை நெகிழ வைக்­கிறது," என்­கி­றார் சிவ­கார்த்­தி­கேயன்.

, : தகவல் சாதனங்கள்