கடந்த 14 ஆண்டுகளாக அப்துல் கலாம் போதித்த பத்துக்கட்டளைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியைச் செய்து வருகிறார் தாமு.
ஒரு காலத்தில் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தவர், இப்போது திரையுலகில் இருந்து ஒதுங்கி நிற்கிறார்.
கலாம் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க வேண்டும் அதையும் தாமே இயக்க வேண்டும் என்பதுதான் தாமுவின் லட்சியம். அதற்காக கடுமையாக உழைக்கிறார்.
"கலாமின் படத்தை நான்தான் இயக்குவேன். நான் அவருடைய சீடன். தமிழில்தான் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும். இதை என்னுடைய மிகப்பெரிய கடமையாகவும் எனக்குக் கிடைத்த பாக்கியமாகவும் கருதுகிறேன்.
"பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்து கலாம் குறித்து பேசி வருகிறேன். மாணவர்களைச் சந்திக்கக் கூடிய மனநிறைவு திரைப்படங்களில் கிடைக்காது. திரையுலகில் கிடைக்கும் மனநிறைவு இதுவும் மாறுபட்டவை.
"பல மாணவர்கள் என்னை ஒரு குருவாகப் பார்க்கிறார்கள். மாணவர்கள் மற்றவர்களின் கையெழுத்து வாங்குபவர்களாக மட்டும் இருக்கக்கூடாது. ஒவ்வொரு மாணவனின் கையெழுத்தையும் மதிப்புமிக்கதாக மாற்ற வேண்டும் என விரும்புகிறேன்," என்கிறார் தாமு.

