'கோபத்தை மீறி நடித்தேன்'

'கோபத்தை மீறி நடித்தேன்'

3 mins read
520954d6-d14a-441c-a9b0-69439bd8f91e
-

தமிழ் சினி­மா­வின் தீவிர ரசி­கர்­க­ளுக்கு அஞ்­சலி நாயர் குறித்து தெரிந்­தி­ருக்­கும். 'நெடு­நல்­வாடை', 'டாணாக்­கா­ரன்' என இரண்டு தமிழ்ப் படங்­களில் மட்­டுமே நடித்­துள்­ளார்.

அடுத்து 'காலங்­களில் அவள் வசந்­தம்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார்.

ஒரு படத்­தில் ஒப்­பந்­த­மா­னோம், இரண்டு காதல் பாடல்­க­ளுக்கு நட­ன­மா­டி­னோம், கவர்ச்சி காட்­டி­னோம் என்­றில்­லா­மல், உணர்­வு­பூர்­வ­மாக நடிப்­ப­தற்­கும் வாய்ப்­புள்ள கதைக்­க­ளங்­களை மட்­டுமே தேர்வு செய்­கி­றார் அஞ்­சலி நாயர்.

"கடந்த 2019ஆம் ஆண்டு 'நெடு­நல்­வாடை' படம் வெளி­யா­னது. அதன் பின்­னர் சினிமா பய­ணம் சிறப்­பா­க­வும் சிக்­க­லின்­றி­யும் இருக்­கும் என்று நினைத்­துக்­கொண்­டி­ருந்­தேன். அப்­போ­து­தான் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் தீவி­ர­ம­டைந்து எனது எதிர்­கால கன­வு­க­ளை­யும் திட்­டங்­க­ளை­யும் கனவு களை­யும் தவி­டு­பொ­டி­யாக்­கி­விட்­டது.

"அதன் பிறகு 'டாணாக்­கா­ரன்' படம் என் நடிப்­புக்கு நல்ல விமர்­ச­னத்தை பெற்­றுத்­தந்­தது. அது மட்­டு­மல்ல, தனிப்­பட்ட வகை­யில் என் மன­துக்கு நெருக்­க­மான பட­மா­க­வும் அமைந்­தது," என்­கி­றார் அஞ்­சலி.

இவர் ராணு­வக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர். அஞ்­ச­லி­யின் பெற்­றோர் இரு­வ­ருமே இந்­திய ராணுவ அதி­கா­ரி­கள். அத­னால் தங்­கள் மகளும் ராணு­வத்­தில் சேர்ந்து நாட்­டுக்­காக சேவை செய்து உயர் பத­வி­யில் அமர வேண்­டும் என விரும்பி உள்­ள­னர்.

"அப்பா அம்­மா­வுக்கு நானும் ராணு­வத்­தில் சேர வேண்­டும் என்­ப­தில்­தான் விருப்­பம் அதி­கம். ஆனால், நான் 'சைக்­கா­லஜி' துறை­யில் பட்ட மேற்­ப­டிப்பை முடித்­து­விட்டு, வேறு துறை­யில் நல்ல வேலை­யில் சேர வேண்­டும் எனத் திட்­ட­மிட்­டேன்.

"மற்­ற­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டு­வது என்­றால் எனக்கு மிக­வும் பிடிக்­கும். மனி­தர்­க­ளைப் படிக்க வேண்­டும் என விரும்­பு­வேன். என் சகோ­த­ரி­யும் ராணு­வத்­தில்­தான் பணி­யாற்­று­கி­றார். அவ­ரும் சரி, பெற்­றோ­ரும் சரி... எனது முடி­வில் மன­நி­றைவு இல்லை என்­றா­லும் எனது சினிமா ஆசைக்கு தொடக்­கத்­தில் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை.

"ராணு­வப் பள்­ளி­யில்­தான் படித்­தேன். அந்­தச் சம­யத்­தில் சினிமா, நடிப்பு, மாட­லிங் குறித்­தெல்­லாம் அறவே யோசித்­தது கிடை­யாது. கல்­லூ­ரி­யில் இரண்­டாம் ஆண்டு படித்­த­போது ஒரு விளம்­ப­ரப் படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது.

"சரி முயற்சி செய்து பார்ப்­போம் என்று அதில் நடித்­தேன். நானே எதிர்­பா­ராத வித­மாக அடுத்­த­டுத்து நிறைய வாய்ப்­பு­கள் தேடி­வ­ரத் தொடங்­கின. அவற்றை மறுக்க மனம் வர­வில்லை. அத­னு­டைய தொடர்ச்­சி­யா­கத்­தான் முதல் பட­மான 'நெடு­நல்­வாடை' நாயகி வாய்ப்பு கிடைத்­தது.

"என்­னு­டைய நடிப்பு பாராட்­டு­க­ளைப் பெற்­றுத் தந்­தா­லும் பெற்­றோ­ருக்கு நான் சினிமா துறை­யில் நீடிப்­பது ஏனோ பிடிக்­க­வில்லை. விளம்­ப­ரங்­களில் நடித்­த­போதே கோப­மாக இருந்­த­னர். ஆனால் சமா­ளித்­து­வி­ட­லாம் என்ற நம்­பிக்­கை­யில் அந்­தக் கோபத்­தை­யும் மீறி நடித்­தேன்.

"ஒரு­கட்­டத்­தில் சினிமா துறை பற்றி மற்­ற­வர்­கள் சொல்­வ­தைக் கேட்டு பயந்­த­னர். இரு­வ­ரும் மறை­மு­க­மாக, என் மனம் நோகாத வகை­யில் சில அறி­வு­ரை­க­ளைக் கூறி­னர். ஆனால் நான் கேட்­க­வில்லை.

"பிறகு அடுத்­த­டுத்த எனது நடிப்­பில் இண்டு படங்­கள் வெளி­யா­ன­தும், எப்­ப­டியோ நம் மகள் இந்­தத் துறை­யில் வளர்ந்து பெரிய ஆளாக முடி­யும் என்ற நம்­பிக்கை வந்­த­தும் என் போக்­கில் செல்ல அனு­ம­தித்­த­னர்," என்­கி­றார் அஞ்­சலி நாயர்.

'காலங்­களில் அவள் வசந்­தம்' படம் குறித்து?

"கதைப்­படி கதா­நா­ய­கி­யின் கதா­பாத்­தி­ரம் என் மன­தைக் கவ­ரும் வகை­யில் இருந்­தது. சரி­யா­கச் சொன்­னால் என்­னு­டைய 80 விழுக்­காடு குணா­தி­ச­யங்­க­ளு­டன் பொருந்­திப் போ­கும் பாத்­தி­ரம் என­லாம்.

"தனக்­குப் பிடித்­த­மா­னதை துணிச்­ச­லு­டன் செய்­யும் இளம் பெண். எதை­யும் வெளிப்­ப­டை­யா­கப் பேசத் தயங்­கா­த­வள். திரு­ம­ணத்­துக்கு முன்­பும் பிற­கும் வரக்­கூ­டிய காத­லில் எது உண்­மை­யா­னது என்­ப­து­தான் கதை. இதை ஜாலி­யா­க­வும் நகைச்­சு­வை­யா­க­வும் அல­சி­யுள்­ளார் இயக்­கு­நர். சி.வி.குமார் தயா­ரிக்க, ராகவ் இயக்க, கௌஷிக் என்ற புது­மு­கம் நாய­க­னாக நடித்­துள்­ளார்," என்று சொல்­லும் அஞ்­ச­லிக்கு நடி­கர்­களில் தனு­ஷின் நடிப்­பு­தான் ரொம்­பப் பிடிக்­கு­மாம்.

நடி­கை­களில் நித்யா மேன­னின் தீவிர ரசிகை. இரு­வ­ரும் இணைந்து நடித்­துள்ள 'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்­த­தா­கச் சொல்­கி­றார்.