விருந்து தரப்போகும் 'வாரிசு'

விருந்து தரப்போகும் 'வாரிசு'

3 mins read
be7b9d1e-c0d1-4e54-b2b1-8b6a67c88ece
-

'வாரிசு' படம் குறித்து அடுத்­த­டுத்து வெளி­வரும் தக­வல்­கள் விஜய் ரசி­கர்­களை உற்சாகத்­தின் உச்­சத்­துக்கு கொண்டு செல்­கின்­றன.

தெலுங்கு இயக்­கு­நர் வம்சி இயக்கி வரும் இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு முடி­வ­டை­யும் முன்பே விநி­யோக உரிமை, தமிழ்­நாடு, ஆந்திரா, தெலுங்­கானா, கேரளா என அனைத்து தென் மாநி­லங்­க­ளி­லும் பெருந்­தொ­கைக்கு விலை போயி­ருப்­ப­தா­கத் தக­வல்.

'பீஸ்ட்' படத்­துக்­குப் பிறகு விஜய்யை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்­த­போது அட்லீ, லோகேஷ் கன­க­ராஜ், ஏ.ஆர்.முரு­க­தாஸ் எனப் பல­ரது பெயர்­கள் அடி­பட்­டன. ஆனால், யாரும் எதிர்­பா­ராத திருப்­ப­மாக திடீ­ரென தெலுங்கு இயக்­கு­நர் வம்­சியைத் தேர்வு செய்­தார் விஜய். இவர் தெலுங்­கில் சில வெற்­றிப் படங்­க­ளைக் கொடுத்த இயக்­கு­நர். கார்த்தி நடித்த 'தோழா' படம் மூல­மாகத் தமிழ் ரசி­கர்­களி­ட­மும் நல்ல பெய­ரும் பாராட்­டும் பெற்­ற­வர் வம்சி.

அவர் குடும்­பப் பாசம், நகைச்­சுவை என அழ­கான கதைக்­க­ளத்தை வைத்து ஒரு கதையைச் சொல்ல, அது பிடித்­துப்போன­தால் விஜய் உடனே நடிக்க ஒப்­புக்­கொண்­டார் எனத் தக­வல். அண்­மைய பேட்­டி­யில் 'வாரிசு' படம் தொடர்­பாக பல்­வேறு சுவா­ர­சி­ய­மான தக­வல்­களைப் பகிர்ந்துகொண்­டுள்­ளார் வம்சி.

"ஓர் இயக்­கு­ந­ருக்­கும் கதா­நா­ய­க­னுக்­கு­மான முதல் சந்­திப்பு என்­பது காத­லர்­க­ளின் முதல் சந்­திப்பு போன்று மிக முக்­கி­ய­மா­னது. மன­தில் ஒரு­வித பட­ப­டப்பு, எதிர்­பார்ப்பு, தயக்­கம் என எல்­லாம் இருக்­கும். அதி­லும் விஜய் போன்ற பெரிய நட்­சத்­தி­ரத்தை சந்­திக்­கும்­போது இயல்­பா­கவே பதற்­றம் ஏற்­படும்.

"ஹைத­ரா­பாத்­தில் இருந்து சென்­னைக்­குப் பறந்து சென்று விஜய்யை சந்­தித்­தோம். அவ­ரது (விஜய்) வீட்­டுக்­குள் நுழைந்து, சில நிமி­டங்­கள் காத்­தி­ருந்­த­போது, தனது அறை­யில் இருந்து சிரித்­த­ப­டியே வெளியே வந்து, தண்ணீர் கொடுத்து நலம் விசா­ரித்­தார்.

"சிறிய அறி­மு­கப் பட­லத்­துக்­குப் பிறகு நான் சொன்ன கதையை மிக­வும் அமை­தி­யாக கேட்டுக்­கொண்­டார். ஆனால் கதை சொல்லி முடிக்­கப்­படும் வரை முகத்­தில் எந்­த­விதச் சலனமும் இல்லை. கதை பிடித்­தி­ருக்­கி­றதா, இல்லையா என எனக்குப் பதற்­றம் அதி­க­ரித்­த­ப­டியே இருந்­தது.

"இறு­திக் காட்­சியை விவ­ரித்து முடித்­த­தும், முப்­பது விநா­டி­கள் அமை­தி­யாக இருந்­தார். பிறகு, 'நல்ல கதை சார். நாம் இணைந்து பணி­யாற்­ற­லாம்' என்று அவர் சுருக்­க­மாக சொன்­ன­போது, என் மன­தில் ஏற்­பட்ட மகிழ்ச்சியை விவ­ரிக்க வார்த்­தை­களே இல்லை," என்­கி­றார் இயக்­கு­நர் வம்சி.

'வாரிசு' என்ற தலைப்பைத் தேர்வு செய்ய என்ன கார­ணம்?

"ஒரு தலைப்பு என்­பது அந்­தப் படத்­தின் கதைக்கருவை மறை­மு­க­மா­கச் சொல்­லும்­படி இருக்க வேண்­டும். நாம் கையா­ளும் கதைக்குப் பொருத்­த­மா­ன­தாக இருப்­ப­தும் அவ­சி­யம். இந்­தப் படத்­தைப் பார்க்­கும்­போது, சரி­யான தலைப்­பு­தான் என்­பதை ஒவ்­வொரு ரசி­க­ரா­லும் உணர முடி­யும்.

"விஜய்­யி­டம் கதை­யைச் சொல்லி முடித்த உட­னேயே மன­தில் தோன்­றிய தலைப்பு இது. குடும்ப உணர்­வு­க­ளு­டன் கூடிய கதை என்­ப­தால், 'படம் இப்­ப­டித்­தான் இருக்கும்' என முன்­கூட்­டியே முடிவு செய்­து­விட வேண்­டாம். விஜய் ரசி­கர்­க­ளுக்கு என்ன தேவையோ, அந்த அம்­சங்­கள் அனைத்­தும் 'வாரிசு' படத்­தில் இடம்­பெ­றும்," என்­கி­றார் வம்சி.

சிறார்­கள் முதல் முதியவர்கள் வரை எல்­லோ­ருக்­கு­மான பட மாக 'வாரிசு' உரு­வாகி வரு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், படம் பார்க்­கும் ரசி­கர்­க­ளுக்கு தங்­கள் குடும்­பத்­தில் நடக்­கும் கதை­யைப் பார்ப்­பது போன்ற உணர்வு ஏற்­படும் என்­கி­றார்.

படத்­தின் நாயகி ராஷ்­மிகா மந்­தனா குறித்து?

"விஜய் சார் நடிக்­கச் சம்­ம­தித்­த­தும், இது­வரை அவ­ருடன் நடித்­தி­ராத நாய­கி­யாக இருக்க வேண்­டும் என விரும்பி­னேன். அடுத்த நொடியே மன­தில் தோன்­றி­ய­வர் ராஷ்­மிகா தான். அவர் விஜய்­யின் தீவிர ரசிகை.

"மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு முதன்­மு­றை­யாக அவரை நேரில் சந்­தித்­தேன். அப்­போது அவ­ருக்­குப் பிடித்த நாய­கன் யார் என்று கேட்­ட­போது, ஒரு நொடி­கூட தாம­திக்காமல் தள­பதி விஜய் என்­றார். கதை கேட்­பதற்கு முன்பே கால்­ஷீட் ஒதுக்­கி­விட்­டார். இந்­தப் படத்­தில் சில சிறப்பு அம்­சங்­களும் உள்­ளன. நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு விஜய்­யும் பிர­காஷ் ராஜ் சாரும் இணைந்து நடிக்­கின்­ற­னர். அத­னால் ரசி­கர்­க­ளுக்கு நல்ல விருந்து காத்­தி­ருக்­கிறது.

, :

  

விஜய்