அஞ்சலி கவர்ச்சியாக நடித்திருக்கும் 'ஜான்சி'

அஞ்சலி கவர்ச்சியாக நடித்திருக்கும் 'ஜான்சி'

2 mins read
45c9c3a9-4ee3-4441-abaf-fa49b0a97026
-

திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கும் படங்­க­ளை­விட 'ஓடிடி' தளங்­களில் வெளி­யா­கும் படங்­கள் அதி­கரித்து இருக்­கின்­றன. அதி­லும் இணை­யத்­தொ­டர்­களை குறைந்த செல­வில் தயா­ரித்து அதனை 'ஓடிடி' தளங்­களில் வெளி­யிட பல

இயக்­கு­நர்­கள் ஆர்­வம் காட்டி

வரு­கி­றார்­கள். அஞ்­சலி நாய­கி­யாக நடித்­தி­ருக்­கும் 'ஜான்சி' இணையத்தொடர் தற்­பொ­ழுது 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்­டார்' இணையத்தளத்தில் வெளி­யாகி உள்­ளது.

படுக்­கை­யறைக் காட்­சி­கள், குளிக்­கும் காட்­சி­கள் என

அஞ்­சலி தாரா­ளம் காட்டி நடித்­துள்ள இந்த இணை­யத்­தொ­ட­ருக்கு 18+ சான்­றி­தழ் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. பல படங்­களில் குடும்­பப் பெண்­ணாக நடித்து வந்த அஞ்­சலி இந்­தப் படத்­தில் அதி­கக் கவர்ச்­சி­யு­டன் நடித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த இணை­யத்­தொ­டரை இயக்­கு­நர் கிருஷ்­ண­மூர்த்தி தெலுங்­கில் இயக்கி உள்­ளார். தமிழ் உள்­ளிட்ட பல்­வேறு மொழி­களில் ஜான்சி மறு­ப­திப்பு செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

'மேட் டேமன்' நடிப்­பில் வெளி­யான 'போர்ன்' இணை­யத்­தொ­ட­ரைப்­போ­லத்­தான் இந்­தத் தொட­ரின் கதை­யும் இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

தொடக்கத்திலேயே பெரிய சண்­டைக்குப் பிறகு அரு­வி­யில் இருந்து கீழே விழும் அஞ்­சலி, பழைய நினை­வு­களை இழந்து, தனது மக­ளு­ட­னும் துணை­யாக இருப்­ப­வ­ரு­ட­னும் ஒரு வீட்­டில் வாழ்ந்து வரு­கி­றார்.

அவ­ரு­டைய பழைய நினை­வு­கள் திரும்பி வரு­வ­தும் அவர் தன்னை யார் என்­பதை அறிந்து கொண்­ட­தும் அதற்குக் கார­ண­மான எதி­ரி­களை பந்­தா­டு­வதுதான் 'ஜான்சி' இணை­யத்­தொ­ட­ரின் கதை.

திரு கிருஷ்­ண­மூர்த்தி இயக்­கத்­தில் அஞ்­சலி, முமைத் கான், கல்­யாண் மாஸ்­டர், ராஜ் அர்­ஜுன், சரண்யா,

சம்­யுக்தா ஹார்­னாட் நடிப்­பில் இந்த இணை­யத்­தொ­டர் உருவாகி உள்ளது.

இது­பற்றி இயக்­கு­நர் கூறு­கை­யில், "முத­லில் இணை­யத்­தொ­ட­ராக எடுக்க நிறைய தயக்­கம் இருந்­தது. இதை எப்­படி எடுக்க முடி­யும் என பய­மா­க­வும் இருந்­தது. மிகப்­பெ­ரிய பொருள் செல­வில் எடுக்க வேண்­டிய கதை. எல்­லோ­ரும் சேர்ந்து அதிக செலவு இல்­லா­மல் தயா­ரித்து இருக்­கி­றோம்.

"கதையை அட்­ட­கா­ச­மாக எழு­தி­ இருந்­தார்­கள். படத்­தைப் பார்க்­கும் போது மக்­க­ளுக்­குத் தெரி­யும். கிருஷ்­ணாவை நடிக்க வைத்து படத்தை இயக்குவேன் என்று நினைத்­தேன்.

"ஆனால், நடிகர் கிருஷ்ணா இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாக கூறியதும் முதலில் தயங்கினேன். ஆனால், எங்­க­ளுக்கு வேண்­டிய அனைத்து உத­வி­க­ளை­யும் நன்­றாகப் பார்த்து பார்த்து செய்­து கொடுத்தார்.

"ஒளிப்­ப­தி­வா­ளர் மிக அட்­ட­கா­ச­மாக ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார். அஞ்­சலி இதில் அதி­ர­டி­யாக சண்­டைக் காட்­சி­களில் நடித்­து­இருக்­கி­றார். எல்­லோ­ரும் கடி­ன­மாக உழைத்­துள்­ளார்­கள். இந்­தப் படைப்பு கண்­டிப்­பாக உங்­களை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தும்," என்று கூறினார் இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி.