தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யா - சங்கர் கூட்டணியில் மற்றொரு நாவல் படமாகிறது

3 mins read
373cfc5c-d7a3-4ba7-bbd8-2c3aadaf4fd1
-

வெற்­றி­மா­ற­னின் இயக்­கத்­தில் 'வாடி­வா­சல்' படத்­தில் நடித்­துக்­கொண்டு இருக்­கி­றார் சூர்யா. இந்­தப் படத்­திற்­குப் பிறகு சூர்யா, இயக்­கு­நர் சங்­கர் இயக்­கத்­தில் பிரம்­மாண்­ட­மான ஒரு படத்­தில் நடிக்க இருப்­ப­தாக இயக்­கு­நர் கார்த்­திக் சுப்­பு­ராஜ் அறி­வித்­தி­ருக்­

கி­றார். அது தற்­பொ­ழுது கோலி­வுட்­டைக் கலக்­கிக்­கொண்டு இருக்­கிறது.

கார்த்­தி­யின் 'விரு­மன்' பட இசை வெளி­யீட்டு விழாவில் எம்­.பி­.யும் எழுத்­தா­ள­ரு­மான சு.வெங்­க­டே­ச­னும் கலந்து கொண்­டார். அப்­போது மேடை­யில் பேசிய சூர்யா, சு.வெங்­க­டே­ச­னு­டன் இணைந்து விரை­வில் ஒரு படத்­தில் நடிக்க இருக்­கி­றேன். அது­கு­றித்து விரை­வில் அறி­விப்பு வெளி­யா­கும் என்று கூறி­யி­ருந்­தார்.

சு.வெங்­க­டே­ச­னின் 'வேள்­பாரி' நாவலை பட­மாக எடுக்­க­ இ­ருப்­ப­தைத்­தான் சூர்யா கூறி­ய­தாக சொல்­லப்­பட்­டது. இப்­போது அந்­தப் படத்­தில்­தான் சூர்­யா­வும் சங்­க­ரும் இணைந்­துள்­ளார்­களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அத­னை கார்த்­திக் சுப்­பு­ராஜ் உறுதி செய்­துள்­ளார்.

இது­கு­றித்து பேசிய கார்த்­திக்

சுப்­பு­ராஜ், "வேள்­பாரி' நாவலைப் பட­மாக எடுக்க சங்­கர் முடிவு செய்­துள்­ளார். அது ரூ.1,000 கோடி­யில் தயா­ராக இருக்­கிறது," என்­றார்.

இதற்­கான கதை எழு­தும் வேலை­கள் ஏற்­கெ­னவே தொடங்­கி­விட்­டன. வரவு செலவு அதி­கம் என்­ப­தால் 'RC 15', 'இந்­தி­யன் 2' படங்­களை சங்­கர் முடிக்க திட்­ட­மிட்­டுள்­ளார். சங்­கர் அடுத்து இயக்­க­வுள்ள படம் 'வேள்­பாரி' நாவல்­தான் என்­ப­தை­யும் அவர் உறு­தி­யா­கக் கூறி­யுள்­ளார்.

தற்­பொ­ழுது இந்­திய சினி­மா­வில், வர­லாற்று கதை­களை மையப்­ப­டுத்தி படம் எடுக்­கும் முயற்­சி­களில் பல இயக்­கு­நர்­கள் ஆர்­வம் காட்டி வரு­கின்­ற­னர். இந்­திய சினி­மாவை 'பாகு­பலி'க்கு முன் 'பாகு­பலி'க்கு பின் என்­று­தான் பிரித்­துப் பார்க்கவேண்­டும்.

ஒரு வர­லாற்று கதையை பிரம்­மாண்­ட­மாக எடுத்­தால் அது வெற்றி பெறுமா என்ற தயக்­கத்­தில் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தைக் கூட இதற்கு முன்பு நடி­கர் கமல்­ஹா­சன், எம்.ஜி.ஆர் போன்­ற­வர்­கள் எடுக்க முயற்சி செய்­தும் அவர்­க­ளால் முடி­யா­மல் போனது.

அந்த வகை­யில் ராஜ­மௌலி இயக்­கத்­தில் வெளி­யான 'பாகு­பலி' படம் மிகப்­பெ­ரிய அள­வில் வெற்றி பெற்­றது.

இந்­தப் படத்­தின் மூலம் வர­லாற்று கதை­களை 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தைப்­போல பிரம்­மாண்­ட­மாக எடுத்­தால் மக்­கள் நிச்­ச­யம் அந்த படத்­திற்கு அங்­கீ­கா­ரம் கொடுப்­பார்­கள் என்­கின்ற தைரி­யம் பல இயக்­கு­நர்­க­ளுக்கு தற்பொழுது வந்­தி­ருக்­கிறது.

மேலும், "இதை நீங்­கள் பட­மாக எடுக்­க­லாம்," என்று சங்­கரை

வலி­யு­றுத்­தி­யுள்­ளார் இயக்­கு­நர்

லிங்­கு­சாமி. அதன்பின் 'வேள்­பாரி' கதையைப் படித்த சங்­கர், இதைப் பட­மாக எடுக்க முடிவு செய்­துள்­ளார்.

பிர­பல எழுத்­தா­ளரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்­க­டே­ச­னி­டம் பெரும் தொகை­யைக் கொடுத்து அந்த நாவலை வாங்­கி­யுள்­ளார் இயக்­கு­நர் சங்­கர்.

இந்­தப் படத்தை மூன்று தயா­ரிப்­பா­ளர்­கள் இணைந்து தயா­ரிக்­கி­றார்­கள். அதில் பிர­பல 'ஓடிடி' நிறு­வ­ன­மான 'நெட்­ஃபிக்ஸ்', பிர­பல இந்தி தயா­ரிப்­பா­ளர் கரண் ஜோகர், பிர­பல இந்தி தயா­ரிப்பு நிறு­வ­னம் ஆகி­யோ­ரு­டன் சங்­கர் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளார்.

இதில் 'ஓடிடி' தளத்தை 'நெட்­பிக்ஸ்' நிறு­வ­ன­மும் திரை­ய­ரங்கு வெளி­யீட்டை கரண் ஜோக­ரும் பிரித்துக்கொள்ளலாம் என்று அவர்­க­ளுக்­குள் பேசி ஒப்­பந்­தம் செய்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

அந்த வகை­யில் சுமார் ஆயி­ரம் கோடி வரவு செலவுத் திட்­டத்­தில் உரு­வா­கும் 'வேள்­பாரி' படத்தை பல மொழி­களில் எடுத்து உல­கம் முழு­வ­தும் வெளி­யிட திட்­ட

­மி­ட்டுள்ளனர்.

இந்­நி­லை­யில் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தைத் தொடர்ந்து மேலும் தமி­ழ­ரின் வர­லாறை உல­கம் முழு­வ­தும் எடுத்துச் செல்ல தயா­ரா­கி­விட்­டார் இயக்­கு­நர் சங்­கர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சங்­கர் தற்­பொ­ழுது தெலுங்கு

நடி­கர் ராம்­ச­ரண் நடிப்­பில் புதிய படம் ஒன்றை இயக்கி வரு­கி­றார். அத்துடன் பாதி­யிலே நின்ற 'இந்­தி­யன் 2' படத்­தை­யும் மீண்­டும் இயக்­கத் தொடங்­கி­யுள்­ளார்.

சங்­கர் இந்த இரண்டு படங்­

க­ளின் வேலை­க­ளை­யும்

முடித்­து­விட்டு, 'வேள்­பாரி' படத்­தைத் தொடங்­கு­வார் என்று கூறப்ப­டு­கிறது.

இள­வ­ரசி குந்­த­வை­யாக நடித்ததால் திரிஷாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பதால் அவரைப்போல ஆக­வேண்­டும் என்ற எண்­ணத்­தில் பல நடி­கை­கள் இயக்­கு­நரையும் தயாரிப்புத் தரப்பையும் அணுகி வாய்ப்­புக் கேட்டு வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­ கிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கும் சூர்யாவின் தோற்றம்.