'குடும்பமாகச் செயல்பட்ட அனைவருக்கும் நன்றி'

2 mins read
6ac08c77-4a29-4cdc-92cb-0ae429d0b8c8
-

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் வெற்றி விழா சென்­னை­யில் கொண்­டா­டப்­பட்­டது. இதில் இயக்­கு­நர் மணி­ரத்­னம், விக்­ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்­பட பல திரைப்­பி­ர­ப­லங்­கள் கலந்துகொண்­ட­னர்.

இதில் இயக்­கு­நர் மணி­ரத்­னம், "அனை­வ­ருக்­கும் எப்­படி நன்றி சொல்­வது என்று தெரி­ய­வில்லை. அத­னால் முத­லில் வணங்­கிக்கொள்­கி­றேன்.

"அம­ரர் கல்­கிக்­குத்­தான் முதல் நன்றி. 'பொன்­னி­யின் செல்­வன்' நாவ­லைப் படித்த வாச­கர்­கள் அனை­வ­ருக்­கும்

ஒவ்­வோர் ஆசை, கனவு இருக்­கும்.

"அத­னைத் திரைப்­ப­ட­மா­கக் கொண்டு வரு­வது என்­பது ஒரு பேராசை. அந்­தப் பேரா­சையை அடைந்­து­விட்­டேன். இதனை அனு­ம­தித்து அங்­கீ­க­ரித்த அனை­வ­ருக்­கும் நன்றி.

"'பொன்­னி­யின் செல்­வன்' படத்தை எடுக்­க­லாம் என்று இருக்­கி­றேன் என்று சுபாஷ்­க­ரன் சாரி­டம் சொன்­னேன். உடனே இரண்டு நிமி­டங்களில் சரி என்று சொல்­லி­விட்­டார்.

"இப்­ப­டத்­தில் நடித்த நடி­கர்­கள் அனை­வ­ரும் ஒரு குடும்­பம்­போல் செயல்­பட்டார்கள். அவர்­கள் இல்லை என்­றால் நிச்­ச­ய­மாக இதை உரு­வாக்கி இருக்க முடி­யாது.

"முக்­கி­ய­மா­க கொரோனா கால­கட்­டத்­தில் உடல் எடையை ஏற்றாமல் இருந்­த­தற்­கும் கொடுக்­கப்­பட்ட கதா­பாத்­தி­ரத்­திற்கு ஏற்­றார்போல் மாறி­ய­தற்­கும் நன்றி.

"இப்­ப­டத்­தில் உதவி இயக்­கு­நர்­கள், தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் என

நிறை­ய பேர் பணி­யாற்­றி­னார்­கள்.

"அவர்­க­ளைப் பார்க்­கும்­போது பய­மாக இருக்­கும். இவ்­வ­ளவு பேர் நம்மை நம்பி வேலை செய்துகொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் அனை­வ­ரை­யும் வேலை வாங்­கு­வது ஒரு பெரிய பொறுப்பு எனத்­தோன்­றும்.

"ஒவ்வொரு காட்சியையும் எடுக்கும் போது எப்படி எடுக்கப்போகிறோம் என்ற பிரமிப்பு இருக்கும். ஆனால், எப்படியோ எடுத்துவிடுவோம்.

"பின்னணியில் வேலை செய்பவர்கள் நம் கண்­க­ளுக்குத் தெரியமாட்­டார்­கள். ஆனால் வேலை நடக்கும். அவர்­க­ளு­டைய பங்­க­ளிப்பை மிகப்­பெ­ரி­ய­தா­கக்

கரு­து­கி­றேன். என்­னி­டம் சொல்­வ­தற்கு வார்த்­தை­களே இல்லை. அனை­வ­ருக்­கும் நன்றி," என்று பேசி­னார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.

இதற்­கி­டை­யில் இயக்­கு­நர் மணி­ரத்­ன­மும் தயா­ரிப்­பா­ளர் சுபாஸ்­க­ர­னும் இணைந்து கல்கி கிருஷ்­ண­மூர்த்தி நினைவு அறக்­கட்­டளை அலு­வ­ல­கத்­துக்கு நேரில் சென்று, அம­ரர் கல்­கி­யின் மகன் கல்கி ராஜேந்­தி­ர­னைச் சந்­தித்­த­னர்.

இந்தச் சந்­திப்­பின்­போது கல்கி ராஜேந்­தி­ரன், தன் தந்­தை­யின் பெய­ரில் நடத்தி வரும் கிருஷ்­ண­மூர்த்தி நினைவு அறக்­கட்­ட­ளைக்கு மணி­ரத்­தி­ன­மும் சுபாஷ்­க­ர­னும் இணைந்து ரூ.1 கோடிக்­கான காசோ­லையை நன்­கொ­டை­யாக வழங்­கி­னர்.