ரஜினிக்கு பதில் கமல்; கோடம்பாக்கம் அதிர்ச்சி

3 mins read
90b70d49-90ea-431c-aaf7-9f26fed36e7b
-

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தின் வெற்­றிக்­குப் பிறகு இயக்­கு­நர் மணி­

ரத்­னம் 'லைகா நிறு­வ­னம்' சார்­பில் ரஜி­னியை வைத்து படம் இயக்­கு­வார் என்ற தக­வல்­கள் முன்பு வெளி­யா­யின. அத­னால் ரஜினி ரசி­கர்­கள் ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கை­யில் தற்­பொ­ழுது மணி­ரத்­னம் ரஜி­னிக்­குப் பதில் கமலை வைத்து படம் இயக்க இருக்­கி­றார் என்ற செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்­சி­யில் ஆழ்த்தி இருக்­கிறது.

35 ஆண்­டு­க­ளுக்கு முன்பு

இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தின் இயக்­கத்­தில் கமல்­ஹா­சன் நடித்த 'நாய­கன்' படம் வெளி­யாகி மிகுந்த வர­வேற்­பைப் பெற்­றது. இன்­றும் மிகச் சிறந்த

இந்­திய படங்­களின் பட்­டி­ய­லில் 'நாயகன்' பட­மும் இடம்­பெற்­றி­ருக்­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று கமல்­ஹா­ச­னின் பிறந்­த­நாள். அன்­றைய தினம் கமல் தன்­னு­டைய அடுத்த படத்தைப் பற்றி அறிவிப்பார் என்று கோடம்பாக்கம் காத்­தி­ருந்­தது.

ஆனால், இயக்­கு­நர் மணி­ரத்­னம் ரஜி­னிக்­குப் பதில் கமலை வைத்து படம் எடுப்­பார் என்று யாரும் எதிர்­பார்க்­காத நிலை­யில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்த காணொளி ஒன்றை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

கமல்­ஹா­ச­னின் 'ராஜ்­க­மல் பிலிம்ஸ்', உத­ய­நி­தி­யின் 'ரெட் ஜெயண்ட்ஸ்', மணி­ரத்­னத்­தின் 'மெட்­ராஸ் டாக்­கிஸ்' நிறு­வ­னங்­கள் இணைந்து வழங்­கும் இந்தப் படத்­திற்கு ஏ.ஆர்.ரகு­மான் இசை அமைக்க உள்­ளார்.

இந்­தக் கூட்­டணி மீண்­டும் 35

ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இணை

­வ­தால் படத்­தைப் பற்­றிய எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

'பொன்­னி­யின் செல்­வன்' படம் வெளி­யான உட­னேயே பல­ரும் இரண்­டாம் பாகம் எப்­போது என்று கேள்வி கேட்­கத் தொடங்­கி­விட்­டார்­கள்.

அது­பற்றி இயக்­கு­நர் மணி­ரத்­னம் கூறு­கை­யில், "நான் கல்­லூ­ரி­யில் படிக்­கும்­போது ஐந்து பாகங்­க­ளை­யும்

ஓவி­யர் மணி­யத்­தின் ஓவி­யங்­க­ளு­டன் ஒரே மூச்­சில் படித்து முடித்­தேன்.

"சோழர்­க­ளு­டைய நிலப்­ப­ரப்­பு­கள், குதி­ரை­கள், கதா­பாத்­தி­ரங்­கள், பழு­வேட்­ட­ரை­ய­ரின் இரட்டை மீசை, இவை யாவும் என் மன­தை­விட்டுப் போகவே இல்லை.

"மணி­யம் ஓவி­யம் இல்­லா­மல் இந்தக் கதையைப் படித்­தி­ருக்க முடி­யாது. மணி­யம்தான் அடித்­த­ள­மாக இருந்­தார்.

"ஆழ்­வார்க்­க­டி­யான் நம்பி என்­ப­வர் குடு­மி­யோடு மதில் மேல் வெறும் தலை மட்­டும் வைத்­துக் கொண்டு இருப்­

ப­வர். நந்­தினி என்­றால் ஒரு ஆண்­டாள் கொண்டை தேவைப்­ப­டு­கிறது என்­பதை அவரே சுல­ப­மாக வரை­

ய­றுத்­துக் கொடுத்­து­விட்­டார்.

"ஆனால், அவர் அதைச் சாதா­ர­ண­மாக வரை­ய­வில்லை. அவ­ரும் அந்தக் காலத்­தில் எப்­படி இருந்­தார்­கள் என்று ஆராய்ச்சி செய்து விளக்­கத்­து­டன் தான் வரைந்து கொடுத்­தி­ருக்­கி­றார். ஆகை­யால், நான் அந்த அடித்­த­ளத்தை மீறிப் போக­வில்லை.

முதல் விஷ­யம், இந்த தலை­மு­றை­யி­ன­ருக்கு சுல­ப­மாக கதைப் புரிய வேண்­டும், இரண்­டா­வது சோழர் காலத்தை குறிக்க வேண்­டும்.

"இதை ஜெய­மோ­கன் மிக எளி­மை­யாகச் செய்­தார். பாரம்­ப­ரிய தமிழ்­தான். ஆனால், குறு­கிய வாக்­கி­யங்­க­ளாக எழு­தி­னார். அது உணர்ச்­சி­யு­டன் நடிப்­

ப­தற்­கும் படப்­பி­டிப்பு நடத்­து­வ­தற்­கும் மிகப் பெரிய அனு­கூ­ல­மாக இருந்­தது.

"ஐந்து பாகங்கள்கொண்ட இந்தக் கதையை இரண்டு படங்­க­ளி­லேயே கொண்டு வரு­வ­தற்கு சில காட்­சி­

க­ளைத் தியா­கங்­கள் செய்ய வேண்­டி­­ இருந்­தது.

"மேலும், முதல் பாகம் பார்க்­கா­த­வர்­க­ளுக்­கும் இரண்­டா­வது பாகம் புரிய வேண்­டும். இந்த இரண்டு பாக­மும் தனி­யா­க­வும் இருக்க வேண்­டும், சேர்ந்து இருந்­தால் இன்­ன­மும் நன்­றாக இருக்க வேண்­டும். இதன் அடிப்­ப­டை­யில்­தான் எடுத்­தோம்.

"இரண்­டாம் பாகத்தை முடித்து விட்டோம். அடுத்த ஆண்டு ஏப்­ரல் 28ஆம் தேதி­யன்று திரை­கா­ணும்," என்று கூறி­னார் மணி­ரத்­னம்.