சக நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. பிரிவுக்குப் பின் அந்த ஜோடி தங்களது திருமண வாழ்க்கைப் பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டது இல்லை. இந்நிலையில் சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்
பதாக அண்மையில் வெளிப்
படையாக அறிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, அவரின் மைத்துனர் அகில், "விரைவில் குணமடைய வேண்டும்," என்று பதிவிட்டு இருந்தார்.
அவரைத் தொடர்ந்து அகிலின் அண்ணன் நாக சைதன்யா, அப்பா நாகர்ஜுனா இருவரும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதன்பின் நாக சைதன்யா, நாகார்ஜுனா இருவரும் சமந்தாவை நேரில் சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளி வந்தன.
ஆனால், இருவரும் மும்முரமாக நடித்துக் கொண்டிருப்பதால் சமந்தாவை நேரில் சந்திக்கச் செல்லவில்லை. இருப்பினும் நாக சைதன்யா, சமந்தாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாகவும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என நாக சைதன்யா சொன்னதாகவும் தெலுங்கு திரையுலகில் செய்தி வெளியாகி உள்ளது.

