சமந்தாவின் உடல்நலம் குறித்து விசாரித்த முன்னாள் கணவர்

சமந்தாவின் உடல்நலம் குறித்து விசாரித்த முன்னாள் கணவர்

1 mins read
c430284d-1d4a-42a8-b285-3c16d507fa02
-

சக நடி­கர் நாக சைதன்­யா­வைக் காத­லித்து திரு­ம­ணம் செய்து கொண்டு பிரிந்­த­வர் சமந்தா. பிரி­வுக்­குப் பின் அந்த ஜோடி தங்­க­ளது திரு­மண வாழ்க்­கைப் பிரி­வைப் பற்றி அதி­கம் பேசிக் கொண்­ட­து இல்லை. இந்­நி­லை­யில் சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­

ப­தாக அண்­மை­யில் வெளிப்­

ப­டை­யாக அறி­வித்­தி­ருந்­தார்.

அத­னைத்­தொ­டர்ந்து, அவ­ரின் மைத்­து­னர் அகில், "விரை­வில் குண­ம­டைய வேண்­டும்," என்று பதி­விட்டு இருந்­தார்.

அவ­ரைத் தொடர்ந்து அகி­லின் அண்­ணன் நாக சைதன்யா, அப்பா நாகர்­ஜுனா இரு­வ­ரும் சமூக வலைத்­த­ளங்­களில் ஏதா­வது பதி­வி­டு­வார்­கள் என்று ரசி­கர்­கள் எதிர்­பார்த்­தார்­கள். அதன்­பின் நாக சைதன்யா, நாகார்­ஜுனா இரு­வ­ரும் சமந்­தாவை நேரில் சந்­திக்க உள்­ள­தா­க­வும் செய்­தி­கள் வெளி­ வந்­தன.

ஆனால், இரு­வ­ரும் மும்­மு­ர­மாக நடித்­துக் கொண்­டி­ருப்­ப­தால் சமந்­தாவை நேரில் சந்­திக்­கச் செல்­ல­வில்லை. இருப்­பி­னும் நாக சைதன்யா, சமந்­தாவை தொலை­பேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்ததாகவும் என்ன உதவி வேண்­டு­மா­னா­லும் செய்­யத் தயார் என நாக சைதன்யா சொன்­ன­தா­க­வும் தெலுங்கு திரையுலகில் செய்தி வெளியாகி உள்ளது.