'அடி உதை வாங்கினார்'

'அடி உதை வாங்கினார்'

3 mins read
9f86db74-7bf5-451d-bbe7-b4e32b823844
-

வழக்­க­மாக ஒரு படத்­தின் பாடல் வெளி­யீட்டு விழா­வில் இசை­ய­மைப்­பா­ள­ரை­யும் மீறி படத்­தின் கதா­நா­ய­கனை முன்­னி­லைப்­ப­டுத்­து­வார்­கள். பாடல்­கள் நன்­றாக இருந்­தா­லும் நாய­க­னுக்­குத்­தான் பாராட்­டு­கள் போய்ச்சேரும்.

ஆனால் மகிழ் திரு­மேனி இயக்­கத்­தில், உத­ய­நிதி நடிப்­பில் உரு­வாகி உள்ள 'கல­கத் தலை­வன்' படத்­தின் பாடல் வெளி­யீட்டு விழா­வில் எல்­லாம் தலை­கீ­ழாக இருந்­தது. ஆளா­ளுக்கு உத­ய­நி­தி­யைப் பாராட்­டிப் பேச, அவரோ படத்­தின் இயக்­கு­நர், இசை­ய­மைப்­பா­ளர், கதா­நா­ய­கியை மன­தா­ரப் பாராட்­டி­னார்.

அதி­லும், நாயகி நிதி அகர்­வால் இந்­தப் படத்­துக்­காக அடி, உதை­களை வாங்­கிக்­கொண்டு பொறு­மை­யாக நடித்­த­தா­கக் கூறி அனை­வ­ரை­யும் அதிர வைத்­தார் உத­யநிதி.

"இந்தப் படத்தை இயக்­கு­நர் மகிழ் திரு­மேனி குறிப்­பிட்ட தொகைக்­குள், அதி­லும் குறிப்­பிட்ட கால அவகாசத்துக்குள் எடுத்து முடித்­துள்­ளார். ஆனால் மூன்று ஆண்­டு­க­ளாக தாம் எடுத்த படத்தை அவர் மிகுந்த பொறு­மை­யு­டன் செதுக்கி வந்­துள்­ளார் என்­ப­து­தான் முக்­கி­யம்.

"நவம்­பர் 18ஆம் தேதி வெளி­யீடு என்று அறி­விக்­கா­மல் இருந்­தி­ருந்­தால் இன்­னும்­கூட செதுக்­கிக்கொண்­டி­ருந்­தி­ருப்­பார். செதுக்­கி­ய­ வரை போதும் என்று வெளி­யிட முடிவு செய்­தோம்.

"இந்­தப் படத்­திற்­காக என்னைவிட அதி­க­மாக உழைத்­தது கதை நாயகி நிதி அகர்­வால்­தான். என்­னை­விட அவர்­தான் அதிக காட்­சி­களில் நடித்­தி­ருக்­கி­றார்.

"இனி அவர் தமிழ்ப் படங்­களில் நடிப்­பாரா என்று தெரி­ய­வில்லை. அந்த அள­விற்கு அடி உதை­யெல்­லாம் வாங்கி நடித்­தி­ருக்­கி­றார்.

"நான் முன்­பு­போல் தொடர்ந்து படங்­களில் நடிக்க வாய்ப்பு இல்லை. ஒரு­சி­லர் ஒட்­டு­மொத்த தமிழ் சினி­மா­வை­யும் நான் மட்­டுமே தாங்­கிப் பிடித்­தி­ருப்­ப­து­போல் பேசு­கி­றார்­கள். தய­வு­செய்து சினி­மா­வில் நடிப்பதை விட்­டு­வி­டா­தீர்­கள் என்­றும் கூறு­கி­றார்­கள்.

"எல்­லோ­ரும் ஒரு விஷ­யத்­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். நான் இப்­போ­து­தான் நடிக்­கவே ஆரம்­பித்­தி­ருக்­கி­றேன். நான் நடித்த படங்­க­ளின் இரண்­டாம் பாகத்­தில் நடி­யுங்­கள் என்­கி­றார்­கள். ஆனால் எனக்கு வேறு பல வேலை­கள் உள்­ளன. அத­னால் இப்­போது நடித்­துக்கொண்­டி­ருக்­கும் 'மாமன்னன்' படத்தை முடித்­து­விட்டு கைப்பேசி எண்­ணை­யும் மாற்­றி­விட்டு அமை­தி­யாக ஒதுங்­கி­வி­டப் போகி­றேன்," என்­றார் உத­ய­நிதி ஸ்டா­லின்.

'கலகத் தலைவன்' படம் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கதை என்று சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து இயக்குநர் மகிழ் திருமேனி விளக்கம் அளித்துள்ளார்.

"இது நேரடி அரசியல் படம் கிடையாது. அடிதடியும் அதிரடியும் நிறைந்த கதை. சமுதாயத்தில் பல விஷயங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பணம், மொழி, சாதி, பதவி, அரசியல், பொருளாதாரம் என்று பல கூறுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

"இன்று நாம் சரியான புரிதலில் இல்லை என்றாலும் எந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டாலும் அரசியல், சமூகவியல், பொருளியல் என்று அதன் பின்புலம் தானாக மனதில் பதிந்துவிடும். அது போன்று இதில் மறைமுக அரசியல் இருக்கலாமே தவிர இதில் நேரடி அரசியல் கிடையாது.

"கதைக்களம் நிதி பரிவர்த்தனை களைப் பின்னணியாகக் கொண்டது. இப்படத்தில் சொல்லப்படும் கதை நம் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கும். இந்த மாதிரியான நிகழ்வுகளை சிலர் உணர்ந்தி ருப்பார்கள். உணராதவர்களும் இருப்பார்கள். ஆனால், நம் எல்லோருடைய வாழ்க்கையோடும் தொடர்புடைய கதை," என்கிறார் மகிழ் திருமேனி.

நிதி அகர்வால் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள போதிலும் தமிழில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை என்று குறிப்பிடுபவர், 'கலகத் தலைவன்' படம் அந்த மனக்குறையைப் போக்கும் என்கிறார்.

"நிதி அகர்வால் இயல்பாக நடிக்கக்கூடிய திறமைசாலி.

"படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், அவரது கவனம் முழுவதும் படமாக்கப்படும் காட்சிகளில் தான் குவிந்திருக்கும். அவருக்கு நல்ல எதிர் காலம் நிச்சயம் உண்டு," என்கிறார் மகிழ் திருமேனி.

, :

  