எதிர்மறை வேடத்தில் நடிக்க விரும்பும் அசோக் செல்வன்

எதிர்மறை வேடத்தில் நடிக்க விரும்பும் அசோக் செல்வன்

1 mins read
e3da92c2-e3d2-48db-8fc0-bd4bb655901c
'நித்தம் ஒரு வானம்' படத்தில் அசோக் செல்வன். -

இது­வரை இளை­யர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் பக்­கத்து வீட்­டுப் பையன் என்று சொல்­லத்­தக்க கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து வந்­தார் அசோக் செல்­வன். இப்­போது வில்­லன் கதா­பாத்­திரத்தில் கவ­னம் செலுத்­தப் போவ­தா­கச் சொல்­கி­றார்.

அசோக் செல்­வன் நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான 'நித்தம் ஒரு வானம்' திரைப்­ப­டம் ரசி­கர்­க­ளி­டம் வர­வேற்பைப் பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து கிரா மத்துக் கதை­யி­லும் வில்­ல­னா­க­வும் நடிக்க விரும்­பு­கி­றா­ராம்.

"சினிமா துறை­யில் எந்­த­வித பின்­பு­ல­மும் இல்­லா­மல் அறி­மு­க­மா­னேன். எனது வெற்­றி­க­ளுக்­குப் பின்­ன­ணி­யில் கடும் உழைப்­பும் போராட்­டங்­களும் உள்­ளன.

"திரைத்­து­றை­யில் சாதிப்­ப­தற்கு முன்பு எல்­லா­ருமே பல்­வேறு மேடு பள்­ளங்­க­ளைக் கடந்துதான் வரு­கி­றார்­கள். அதை முழு­மை­­யாக உணர்ந்­துள்­ளேன். நான் நடிக்­கும் ஒவ்­வொரு பட­மும் மாறு­பட்ட கதைக்­க­ளங்­களில் வித்­தி­யா­ச­மாக இருக்க வேண்­டும் என்று நினைக்­கிறேன். அப்­ப­டித்­தான் என் படங்­களை தேர்ந்­தெ­டுக்­கி­றேன்.

"கிரா­மத்துக் கதை­யில் நடிக்க வேண்­டு­மென்ற ஆசை இருக்­கிறது. விரை­வில் அத்­தகைய கதை­யில் என்­னைப் பார்க்­க­லாம். கிரா­மத்­துப் பின்­னணி கொண்ட கதை­யில் வில்­ல­னாக நடிப்­பது நிச்­ச­யம் சவாலான அனு­ப­வ­மாக இருக்­கும்," என்­கி­றார் அசோக் செல்­வன்.