ஜெயம் ரவி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்க
நாதன். தற்போது இவர் இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம் 'லவ் டுடே'. இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், 'லவ் டுடே' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனை தன் வீட்டிற்கு வரவழைத்து, வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சூடு. இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், சிரிப்பு, அன்பு. என்ன ஒரு ஆளுமை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'லவ் டுடே' படத்தைப் பார்த்து வாழ்த்தினார். நீங்க சொன்ன வார்த்தைகளை மறக்க மாட்டேன் சார்," என பதிவிட்டுள்ளார்.
'கோமாளி' படத்தில் ரஜினிகாந்த்தை கிண்டல் செய்தவர்தான் இந்த பிரதீப் ரங்கநாதன். அவரையே அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பதைப் பார்த்து, "இப்படி இருக்காதீர்கள் தலைவா! உங்கள் நல்ல மனதைப் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள். இது
பச்சோந்தி கூட்டம். எச்சரிக்கையாக இருங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

