தென்னிந்தியாவின் முன்னணி நடிகை
களின் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவான 'யசோதா' திரைப்படம் அண்மையில் வெளியானது.
இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. எம்.சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். படம் வெளியானது முதல் நல்ல வரவேற்பு பெற்று, நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்
கிழமையன்று அடாத மழையிலும் படத்தின் விமர்சனத்தைப் பார்த்த மக்கள் திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்தனர். அன்றைய தினம் மட்டும் தமிழ்நாட்டில் ரூ.3.50 கோடி வசூலித்து உள்ளது.
அமெரிக்காவில் மட்டும்
400,000 டாலர்
களுக்கு
மேல் வசூலில் சாதனை செய்துள்ளது.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவர் உடல்நலம் சரியில்லாதபோதும் அதைப்பற்றி படக்குழுவினரிடம் கூட சொல்லாமல் படத்தை முடித்துக்கொடுத்ததுடன் மருத்துவமனையில் இருந்தபடி படத்திற்கு குரல் பதிவு செய்து இருந்தார்.
மேலும் சிகிச்சையின்போதே அவர் விளம்பரதாரர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்தப் படத்திற்காக கடின உழைப்பைக் கொடுத்து இருக்கிறார் சமந்தா.
அதனைப் பாராட்டும் வகையில் இயக்குநர்கள் தங்கள் படக்
குழுவினருடன் இணைந்து சமந்தாவின் வீட்டிற்கே சென்று படத்தின்
வெற்றியைப் பற்றி கலந்து பேசி கொண்டாடினர்.
இந்தப் படத்தில் அவரின் அர்ப்பணிப்பைப் பார்த்து பல இயக்குநர்கள் அவரை அணுகி, தங்கள் படங்களில் நடிக்க கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர் முன்னாள் கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற ஆண்டு பிரிவதாக அறிவித்தார்கள்.
பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். இருவரும் தற்போது மும்முரமாக தங்களின் திரைப்
படங்களில் நடித்து வருகின்றார்கள்.
இந்நிலையில், இருவரும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். "தனிப்பட்ட வாழ்க்கை வேறு, வேலை வேறு. அதனால் இருவரும் இணைந்து நடிப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அவர்கள் சேர்ந்து நடித்தால் அந்தப் படம் நன்றாக ஓடும் என்பது இருவருக்கும் தெரியும். சமந்தா மீது நாகசைத்தன்யாவுக்கு இன்னும் அக்கறை இருக்கின்றது.
"அவர் சமந்தாவை தனது தோழியாக எண்ணுகின்றார் என்பது நன்றாக தெரிகின்றது. நடந்தது நடந்து விட்டது என மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்து இருக்கின்றார்கள்," என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.
சமந்தாவைப் பிரிந்த பிறகும் நாகசைதன்யா தனக்கு ஏற்ற 'ரீல்' ஜோடி சமந்தாதான் என கூறியிருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் அவர்கள் சேர வாய்ப்பு இருப்பதாக பேசி வந்தனர். தற்போது இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகின்றார்கள் என அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள்.

