தமிழ்த் திரையின் தைரியலட்சுமி

தமிழ்த் திரையின் தைரியலட்சுமி

3 mins read
6016df67-5237-4ce1-91da-ec49220276f3
-

தென்­னிந்­தி­யா­வில் ஐந்து முறை 'ஃபிலிம்­பேர்' விருது பெற்று, 'லேடி சூப்­பர் ஸ்டார்' என்று அழைக்­கப்­படும் நயன்­தாரா தன்­னு­டைய 38வது பிறந்­த­நாளை நேற்று கொண்­டா­டி­னார்.

2003ல் 'மனசினக்கரே' என்ற மலை­யாள படத்­தில் அறி­மு­க­மான நயன்­தாரா, அந்­தப் படத்­தைத் தொடர்ந்து 2005ல் தமிழ்த் திரை­யு­ல­கில் 'ஐயா' திரைப்­ப­டத்­தில் அறி­முக நாய­கி­யாக நடித்­தார்.

ரஜி­னி­யு­டன் ஜோடி­யாக நடிக்க வேண்டு­­மா­னால் ஒரு நடிகை நிறைய சாதித்­து­

இ­ருக்க வேண்­டும். ஆனால் தனது 2வது தமிழ்ப் படத்­தி­லேயே ரஜி­னிக்கு ஜோடி­யாக 'சந்­தி­ர­முகி' படத்­தில் நடித்து தமிழ்த் திரை­யு­ல­கில் நிரந்­த­ர­மாக மிளி­ரத் தொடங்­கி­னார் நயன்­தாரா.

தொடர்ந்து அடுத்­த­டுத்து பல வெற்­றிப்­ ப­டங்­களில் நடித்து, தன்­னு­டைய நடிப்­பால் பல­ரின் மன­த்தை­க் கொள்­ளை­ய­டிக்­கத் தொடங்­கி­னார் இவர்.

தமிழ்த் திரை­யு­ல­கில் அதி­க­மான விருது­

க­ளைப் பெற்ற சில நடி­கை­களில் நயன்­தா­ரா­வும் ஒரு­வர்.

மேலும் தமி­ழக அரசு கலை­ஞர்­களை கௌர­விக்­கும் வகை­யில் வழங்கி வரும் 'கலை­மா­மணி' விரு­தை­யும் ஆந்­திரா, தெலுங்­கானா அர­சு­க­ளின் 'நந்தி'

விரு­து­க­ளை­யும் இவர் பெற்­றுள்­ளார். தென்­னிந்­திய சினி­மா­வில் ஒரு நடி­க­ருக்கு வழங்­கப்­படும் மிகப்­பெ­ரிய கௌரவ விரு­தாக இவை கருதப்படுகின்றன. இவை தவிர பல விரு­து­க­ளை­யும் நயன்­தாரா பெற்­றுள்­ளார்.

விறு­விறு என்று முன்­னே­றிக்­கொண்­டு இருந்த நயன்­தாரா சில சறுக்­கல்­க­ளை­யும் சந்­திக்கத் தொடங்கினார். முத­லில் நடி­கர் சிம்பு, பிறகு பிர­பு­தேவா என இரண்டு பிரப­லங்­க­ளைக் காத­லித்­துப் பிரிந்­த­தால் மன­த்த­ள­வில் உடைந்து போனார்.

தமி­ழில் 'பாஸ் என்­கிற பாஸ்­க­ரன்' படத்­திற்­குப் பிறகு நயன்­தா­ரா­வைத் தேட வேண்­டி­யி­ருந்­தது. திரைத்­து­றை­யி­லி­ருந்து இரண்டு ஆண்­டு­கள் வில­கி­யி­ருந்­தார்.

சோகத்­தி­லி­ருந்து தன்னை மீட்­டெ­டுக்க மீண்­டும் படங்­களில் நடிப்­பதே சரி­யான முடி­வாக இருக்­கும் என்று மீண்­டும் கள­மி­றங்­கி­னார் நயன்­தாரா.

அட்­லி­யின் முதல் பட­மான 'ராஜா ராணி', அதற்­குச் சரி­யான வாய்ப்­பாக அமைந்­தது. படம் வெற்றி பெற்­றது மட்­டு­மல்­லா­மல் நயன்­தா­ரா­வின் நடிப்­புக்­கும் சவா­லாக அமைந்தது. அதன்­பி­றகு தொடர்ந்து படங்­களில் நடிக்­கத் தொடங்­கி­னார்.

தமிழ் சினி­மா­வில் கதா­நா­ய­க­னைச் சாரா­மல் ஒரு கதா­நா­ய­கி­யால் தனித்து நின்று பெரிய வெற்­றி­க­ளைப் பெற முடி­யும் என முத­லில் துணிச்சலுடன் களம் இறங்­கி­ய­வர் நயன்­தா­ரா­தான்.

2017ல் வெளி­யான 'அறம்', நயன்­தா­ரா­வின் மதிப்பை மேலும் உயர்த்­தி­யது. அடுத்த ஆண்டு வெளி­யான 'கோல­மாவு கோகிலா' மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற்றுத் தந்தது.

கதா­நா­ய­கர்­க­ளின் தயவு இல்­லா­மல் வெற்­றிப் படங்­களை கொடுக்க முடி­யும் என மற்ற கதா­நா­ய­கி­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கத்­தொ­டங்­கி­னார் நயன்­தாரா.

அத­னால் பெரிய புரட்சி தென்­னிந்­தி­யத் திரை­யு­ல­கில் நிகழ்ந்து வரு­கிறது. ஜோதிகா, சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, ஐஸ்­வர்யா ராஜேஷ், வர­லட்­சுமி, ஓவியா, அமலா பால் என ஒரு பெரிய படையே கதா­நா­ய­கியை மைய­மா­கக் கொண்ட படங்­களில் நடிக்­கத் தொடங்­கி­னார்­கள்.

'நானும் ரெளடிதான்' படத்­தின் உரு­வாக்­கத்­தின்­போது விக்­னேஷ் சிவ­னும் நயன்­தா­ரா­வும் காத­லர்­கள் ஆனார்­கள். ஜூன் மாதம் இருவரும் திரு­ம­ணம்

செய்­து­கொண்­டார்­கள்.

நயன்­தாரா - விக்­னேஷ் சிவன் காதல் கதையை ஆவ­ணப்­ப­ட­மாக கௌதம் மேனன் உருவாக்கியுள்ளார். அந்த ஆவ­ணப் படம் 'நெட்­பி­ளிக்ஸ் ஓடிடி'யில் விரை­வில் வெளி­யா­க­வுள்­ளது.

Nayanthara: Beyond the Fairy Tale என்­ற அந்த ஆவ­ணப் படத்­தின் முன்­னோட்­டக் காட்சி கடந்த செப்­டம்­பர் மாதம் வெளி­யா­னது.

தம்­ப­தி­யர் அக்­டோ­பர் 9 அன்று தாங்­கள் இரட்­டைக் குழந்­தை­க­ளுக்­குப் பெற்­றோர் ஆன­தாக இன்ஸ்­ட­கி­ரா­மில் அறி­வித்தனர்.

இந்­தி­யா­வி­லேயே தனது படத்­தின் விளம்­ப­ரத்­துக்­கா­க நேர்காணல் தராத ஒரே நடிகை நயன்­தா­ரா­தான்.

நயன்­தா­ரா­வின் சொத்து மதிப்பு ஏறக்­கு­றைய ரூ.250 கோடி­யைத் தாண்­டும் என்று கூறப்­ப­டு­கிறது.

நயன்­தா­ரா­வின் பிறந்­த­நா­ளுக்கு வாழ்த்­துச் சொல்­லி­விட்டு, அவ­ரின் இரட்­டைக் குழந்­தை­க­ளைப் பார்த்து வாழ்த்து தெரி­வித்து வந்­தார் நடிகை ராதிகா.

நயன்தாரா புதி­தாக நடிக்க இருக்­கும் ஒரு படத்­திற்கு 35 நாள்­கள் ஒதுக்­கி­யுள்­ளதாகவும் அதற்கு சம்­ப­ள­மாக ரூ.10 கோடி கேட்­டி­ருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கிறது.

தமிழ்த் திரையின் முன்னணி நட்சத்திரமான நயன்தாரா தனக்­கென ஒரு பாதை, வியூ­கம் அமைத்து, அதில் வெற்றி­நடை போட்டு தைரியலட்சுமியாக வலம் வருகிறார்.