தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'இளமைக்கு மாறவிரும்பும் நாயகிகள்'

2 mins read
3a900f37-0386-4f15-af4f-8e73b5d49401
-

இள­மை­யா­கக் காட்­சி­ய­ளிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே பல இளம் நடி­கை­கள் அழகை மேம்­படுத்­து­வ­தற்­கான அறுவை சிகிச்சை­களை செய்துகொள்­கி­றார்­கள். இதற்கு முன்­னணி கதா­நா­ய­கர்­களும் ஒரு வகை­யில் கார­ணம் என்­கி­றார் நடிகை ராதிகா ஆப்தே.

அண்­மை­யில் அளித்த பேட்டி ஒன்­றில், வயது முதிர்வை எதிர்­கொள்ள தாம் அதி­கம் போராடி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அனைத்து முன்­னணி நாயகர்­களும் இளம் நடி­கை­க­ளு­டன் இணைந்து நடிக்­கவே விரும்­பு­கிறார்­கள். குறிப்­பாக வய­தா­கி­விட்ட நாய­கர்­க­ளின் தேர்வு இளம் நாய­கி­கள்­தான். அத­னால்­தான் திரை­யு­ல­கத்தி­னர் மத்­தி­யில் அழ­குக்­கான அறுவை சிகிச்சை செய்துகொள்­பவர்­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது," என்­கி­றார் ராதிகா ஆப்தே.

அண்­மை­யில் நடிகை ஷ்ரு­தி­ஹா­சன் அழகை மேம்­ப­டுத்­தும் நோக்­கில் மூக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்­டார். காதல் சந்தியா, அதுல்யா ரவி உள்­ளிட்ட மேலும் சிலர் இவ்­வாறு சிறப்பு சிகிச்சை பெற்­ற­தாக செய்­தி­கள் வெளியாகின.

இந்­நி­லை­யில் பெரும் பொருள்­செ­ல­வில் உரு­வா­கும் வணிக ரீதி­யி­லான படங்­களில் இளம் நடி­கை­கள் நடிக்க வேண்­டும் என்­ப­து­தான் ரசி­கர்­க­ளின் விருப்­ப­மா­க­வும் உள்­ளது என்­பதை தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கச் சொல்­கி­றார் ராதிகா ஆப்தே.

"இந்த உண்­மையை யாரா­லும் மறுக்க முடி­யாது. ஒரு காலத்­தில் உங்­க­ளி­டம் கவர்ச்சி இல்லை, முகம் இள­மை­யாக இல்லை என்­றெல்­லாம் என் காது­பட சொல்லி இருக்­கிறார்­கள். இப்­ப­டிப்­பட்ட பேச்­சு­கள் எழும்­போது அழகை கூட்­டிக்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் எழு­கிறது.

"ஓர் அழ­கான தோற்­றம் கொண்­ட­வர் வேண்­டும் என்ற தேடு­தல் தொடர்ந்து நீடித்து வரு­கிறது.

"அந்த தேடு­த­லுக்­கான ஓட்­டத்தை இந்­தியா மட்­டு­மன்றி, பரந்துபட்ட உல­கம் முழு­வ­தும் காண முடி­கிறது. இதற்கு எதி­ராக நிறைய பெண்­கள் போராடி வருகின்­ற­னர்," என்­கி­றார் ராதிகா ஆப்தே.

'கபாலி', 'ஆல் இன் ஆல் அழ­கு­ராஜா' உள்­ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்­துள்ள இவர், இப்போது தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிப் படங்களில் நடித்து வரு­கிறார். தமி­ழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்­காதது வருத்தம் அளிப்­ப­தா­கவும் கூறி­யுள்­ளார் ராதிகா ஆப்தே.