'இது ஒரு சராசரி குடும்பத் தலைவனின் கதை'

'இது ஒரு சராசரி குடும்பத் தலைவனின் கதை'

3 mins read
cbf931f3-9416-4486-b1ae-6b526e2be1ce
'சிவப்பு' படத்தில் சசிகுமார். -

சசி­கு­மார் நாய­க­னா­க­வும் விக்­ராந்த் வில்­ல­னா­க­வும் நடிக்­கும் படம் 'சிவப்பு'. இது 'கழுகு' படத்தை இயக்கிய சத்ய சிவா உரு­வாக்­கி­யுள்ள படம்.

"கதை­யைக் கேட்­கத் தொடங்­கி­ய­தும் ஏதோ வழக்­க­மான வட்டத்­துக்­குள் இருப்­ப­து­போன்ற உணர்வு ஏற்­படும். ஆனால் படம் முடிந்­த­தும், 'அட நன்­றாக இருக்­கி­றதே என்று நினைப்­பீர்­கள்" என்கி­றார் இயக்­கு­நர்.

வழக்­க­மான ஒரு குடும்­பத் தலை­வ­னின் கதை இது. சரா­சரி மனி­த­னான அவன் பல்­வேறு பிரச்சினை­களை எதிர்­கொள்­கி­றான். அவற்­றைச் சமா­ளித்­தால்­தான் குடும்­பத்தைக் காப்­பாற்ற இய­லும் என்­கிற நிலை. அப்­போது அந்த சரா­சரி மனி­தன் எப்­ப­டிச் செயல்­ப­டு­கி­றான் என்­பதை விவ­ரிக்­கப் போகிறது 'சிவப்பு' திரைப்படம்.

"சசி­கு­மார் கால்­ஷீட் ஒதுக்­கத் தயா­ரா­ன­தும் எனது பொறுப்பு அதி­க­ரித்­து­விட்­டது. பொது­வாக அவ­ரைப் பற்றி நினைத்­தால் ஒரு கிரா­மத்து தோற்­றம் மன­தில் தோன்றி மறை­யும். ஆனால் இது­வரை அவர் செய்­யாத, எனக்­கும் புதி­தாக இருக்­கக்­கூ­டிய கதையை, கதைக்­க­ளத்தை அமைக்க வேண்­டும் என முடி­வெ­டுத்­தேன். அப்­போ­து­தான் 'சிவப்பு' கதை மெரு­கேற்­றப்­பட்­டது.

"கதைப்­படி ஒலிப்­ப­திவு நிபு­ண­ராக திரை­யில் தோன்­று­வார் சசி குமார். அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெயர் பூமி­நா­தன். இது சசி­கு­மாருக்கு கச்­சி­த­மா­கப் பொருந்­தும் பாத்­தி­ரம். ஆனால் அவ­ரது நடை, உடை, பாவனை எல்­லாமே வித்­தி­யா­ச­மா­ன­தாக இருக்­கும்.

"அவ­ரது முந்­தைய படங்­களில் நிறைய வச­னங்­கள் பேசு­வார், சண்டை போடு­வார். ஆனால் இந்தப் படத்­தில் அவற்­றை­யெல்­லாம் மூட்டை கட்டி வைத்­து­விட்­டேன். மேலும் அவர் இது­வரை முழுக்க முழுக்க நகர்ப்­பு­றத்­தைப் பின்­ன­ணி­யா­கக் கொண்ட கதை­களில் நடித்­த­தில்லை. அந்த மனக்­குறை எல்­லாம் 'சிவப்பு' படம் மூலம் முடி­வுக்கு வரும்,"என்­கி­றார் சத்ய சிவா.

இப்படிப்பட்ட கதைக்களம், கதை, கதாபாத்திரத்துக்குள் சசி குமாரை கொண்டு வருவதே தமக்குப் பெரிய வேலையாக இருந்தது என்று சொல்பவர், இது போன்ற சவாலான அனுபவங்களை சசியும் விரும்புவதாகக் கூறுகிறார்.

"ஒலிப்பதிவு குறித்து அனைத்து நுணுக்கங்களும் நன்கு தெரியும் என்றாலும், தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் என்பதால் சென்னை யில் உள்ள சில ஒலிப்பதிவுக் கூடங்களுக்கு நேரில் சென்று அங்கு நடப்பவற்றை குறித்துக் கொண்டார்.

"ஒலிப்பதிவு நிபுணர்களுடன் கலந்து பேசி பல விவரங்களைத் தெரிந்துகொண்டார்," என்று தன் பட நாயகனை பாராட்டுகிறார் சத்ய சிவா.

வில்லன் கதாபாத்திரம் என்பது மிக முக்கியமானது என்று குறிப்பிடுபவர், ஒரு கதையின் வெற்றியானது அதில் எதிர்மறை பாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கும் என்கிறார்.

"அந்த வகையில் விக்ராந்த் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்தி ரத்துக்காக கடுமையாக உழைப்பவர்.

"பொதுவாக வில்லன் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் ஒரு கற்பனை செய்து வந்திருப்போம். அந்த எண்ணம் சரியானது என்பதை நிரூபிக்க வேண்டியது அந்த வில்லனின் (நடிகர்) பொறுப்பு.

"விக்ராந்த் இந்தக் கதைக்குள் நுழைந்ததும் அறவே மாறிவிட்டார். அவரது வில்லத்தனம் அலற வைக்கும்.

"என் படத்தின் வில்லன் பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் தெரிவார். ஆனால், வில்லனைப் பார்க்கும்போதே நம்மையும் அறியா மல் ஒரு பயம் உண்டாகும். அப்படிப்பட்ட பயத்தை ஏற்படுத்துவார் விக்ராந்த்.

"ஹரிப்ரியா நாயகியாக நடித்துள்ளார். குடும்பத் தலைவியாக வும் ஆறு வயது குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் அவர்தான் உடனடியாக நடிக்க முன்வந்தார்.

"கதைப்படி, நாயகனின் மனைவி யாக நடிப்பவருக்கு ஓரளவு முதிர்ச்சி வேண்டும் என நினைத்தோம். அதற்கு கச்சிதமாகப் பொருந்தி உள்ளார் ஹரிப்ரியா," என்கிறார் சத்ய சிவா.