தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயக்குநர்கள் கோபம்

3 mins read

விஜய்­யின் 'வாரிசு' படத்­திற்கு ஆந்­தி­ரா­வில் அதிக எண்­ணிக்­கை­யில் திரை­ய­ரங்­கு­களை ஒதுக்க இய­லாது என்று கூறப்­பட்­டி­ருப்­பது அவ­ரது ரசி­கர்­க­ளை­யும் திரை­யு­ல­கத்­தி­ன­ரை­யும் கோபத்­தில் ஆழ்த்தி உள்­ளது.

இதை­ய­டுத்து தமிழ் இயக்­கு­நர்­கள் பலர் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்­துள்­ள­னர்.

தில் ராஜூ தயா­ரிப்­பில், வம்சி பைடி­பள்ளி இயக்­கத்­தில் விஜய் நடித்து வரும் திரைப்­ப­டம் 'வாரிசு'. தமிழ், தெலுங்கு என இரு ­மொ­ழி­களில் உரு­வா­கும் இந்­தப் படத்தை பொங்­கல் பண்­டிக்­கை­யின்­போது வெளி­யிட உள்­ள­னர். தெலுங்­கில் 'வர­சுடு' என்ற தலைப்­பில் இப்­ப­டம் வெளி­யீடு காணும்.

இனி தெலுங்­குப் படங்­க­ளுக்­கு­த்தான் அதிக எண்­ணிக்­கை­யி­லான திரை­ய­ரங்­கு­களை ஒதுக்க வேண்­டும் என தெலுங்கு தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம் அண்­மை­யில் முடி­வெ­டுத்­துள்­ளது. அதன்படி பார்த்­தால், விஜய் உள்­ளிட்ட தமி­ழின் முன்­னணி நாய­கர்­கள் நடிக்­கும் படங்­கள் தெலுங்­கில் மொழி­மாற்­றம் செய்­யப்­பட்டு வெளி­யா­கும்­போது தற்­போது ஒதுக்­கப்­படும் திரை­ய­ரங்­கு­க­ளில் மூன்­றில் ஒரு பங்கு மட்­டுமே இனி ஒதுக்கப்படும். இது­தான் சிக்­க­லுக்­கும் மோத­லுக்­கும் வழி­வ­குத்­துள்­ளது.

தெலுங்­கின் முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­க­ளுக்கு திரை ­ய­ரங்­கு­கள் ஒதுக்­கு­வ­தில் சிக்­கல் உரு­வா­கி­யுள்­ளது என்­றும் இதன் கார­ண­மா­கவே தமிழ்ப் படங்­களுக்கு கெடு­பிடி காட்­டப்­ப­டு­வ­தாக ஒரு தரப்­பி­னர் விளக்­கம் அளித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நடை­பெற்ற 'துடிக்­கும் கரங்­கள்' என்ற படத்­தின் முன்­னோட்டக் காட்­சித் தொகுப்பு வெளி­யீட்டு விழா­வில் பேசிய தமிழ் இயக்­கு­நர்­கள் லிங்­கு­சாமி, பேரரசு உள்­ளிட்­டோர் தெலுங்கு தயா­ரிப்­பா­ளர்­களின் முடி­வுக்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

இயக்­கு­நர் பேரரசு பேசு­கை­யில், அஜித்­தின் 'துணிவு', விஜய்­யின் 'வாரிசு' ஆகிய இரு படங்­க­ளுக்­கும் தெலுங்கு தயா­ரிப்­பா­ளர்­கள் தேவை­யற்ற நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­வ­தா­கச் சாடி­னார்.

ஆனால் தெலுங்கு படங்­கள் தமி­ழ­கத்­தில் வெளி­யா­கும்­போது இது­போன்ற நெருக்­கடி ஏற்­ப­டு­வ­தில்லை என்­றும் பேரரசு சுட்­டிக்­காட்­டி­னார்.

'கே.ஜி.எஃப்', 'பாகு­பலி' போன்ற படங்­கள் தமிழ்­நாட்­டில் பண்­டிகை காலங்­க­ளில்­தான் திரை­கண்­ட­­தாக அவர் குறிப்­பிட்டார்.

"அண்­மை­யில், 'பொன்­னி­யின் செல்­வன்' படத்தைக் கொண்­டா­டிய நாம், 'காந்­தாரா' படத்­தின் வெற்­றி­யை­யும் கொண்­டா­டத் தவ­ற­வில்லை. தமி­ழர்­கள் மட்­டுமே பாகு­பாடு பார்ப்­ப­தில்லை," என்றார் இயக்­கு­நர் பேர­ரசு.

இயக்­கு­நர் லிங்­கு­சாமி பேசும்­போது, 'வாரிசு' திரைப்­ப­டம் ஆந்­தி­ரா­வில் பொங்­க­லுக்கு வெளி­யா­க­வில்லை என்­றால், தமிழ்­நாட்­டில் தெலுங்கு சினிமா 'வாரிசு'க்கு முன், 'வாரிசு'க்கு பின் எனும் நிலையைச் சந்­திக்க நேரி­டும் என எச்சரித்­தார்.

"இது சினி­மா­வின் பொற்­கா­லம். ஒரு குறிப்­பிட்ட மொழி­யில், மாநி­லத்­தில் தயா­ரிக்­கப்­படும் படத்தை ஒட்­டு­மொத்த இந்­திய மக்­களும் தங்­க­ளது வீடு­களில் இருந்­த­ப­படி பார்த்து ரசிக்­கி­றார்­கள். இது­போன்ற காலத்­தில் வீண் பிரச்­சி­னை­கள் எழவே கூடாது," என்­றார் லிங்­கு­சாமி.

தமிழ், தெலுங்கு என இரு மொழி­க­ளி­லும் திற­மை­யான படைப்­பா­ளி­கள் உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அனை­வ­ரும் ஒன்­று­கூடி நியா­ய­மான முறை­யில் பேசி இப்­பி­ரச்­சி­னைக்கு சுமு­க­மான முடிவை எடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய அவர், மிக விரை­வில் இந்­தப் பிரச்­சினை தீர்க்­கப்­பட வேண்­டும் என்­றார்.

"ராஜ­ம­வுலி இயக்கிய 'பாகுபலி, 'ஆர்.ஆர்.ஆர்' படங்கள் தமி­ழ­கத்­தில் பெரி­தா­கப் பேசப்­படு­கிறது. தமி­ழ­கத்­தில் எடுக்­கும் படங்­கள் மற்ற மாநி­லங்­க­ளி­லும் வெற்றி பெறு­கிறது. இயக்­கு­நர் சங்­க­ரின் எத்­த­னையோ படங்­கள் ஆந்­தி­ரா­வில் வெளி­வந்­துள்­ளன. எனவே, குறு­கிய எண்­ணத்­தோடு செயல்­ப­டு­ப­வர்­கள், உடனே தங்­களுடைய நிலைப்­பாட்டை மாற்­றிக் கொள்ள வேண்­டும்," என்­றார் லிங்கு­சாமி.

இந்­நி­லை­யில் தெலுங்கு திரை­யு­ல­கத்­தின் முன்­னணி நடி­கர்­களும் இப்­பி­ரச்­சி­னை­யில் தலை­யிட்டு சுமுக தீர்வு ­காண உதவ வேண்­டும் என விஜய் ரசி­கர்­கள் சமூக ஊட­கங்­களில் கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர்.

, :

  