சமந்தா: நன்றி சொல்ல வார்த்தை இல்லை

சமந்தா: நன்றி சொல்ல வார்த்தை இல்லை

3 mins read
c69970d5-a532-41dc-97e5-bd705646ca5e
-

ஹரி - ஹரிஷ் இயக்­கத்­தில் சமந்­தா­வின் வித்­தி­யா­ச­மான நடிப்­பில் வெளி­யா­ன திரைப்­ப­டம் 'யசோதா'. இப்­ப­டத்­தில் வர­லட்­சுமி சரத்­கு­மார், உன்னி முகுந்­தன் ஆகி­யோர் முக்­கிய வேடங்­களில் நடித்­துள்­ள­னர்.

நடுத்­த­ரக் குடும்­பத்­தைச் சேர்ந்த யசோ­தா­வாக நடிக்­கும் சமந்தா தன் தங்­கை­யின் மருத்­துவ செல­விற்கு பணம் தேவை என்­ப­தால் வாட­கைத் தாய் மூலம் குழந்தை பெற்­றுக்­

கொ­டுக்க முடிவு செய்­கி­றார்.

அதை­ய­டுத்து, மூன்று மாதம் ஆன நிலை­யில், மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் செல்­லப்­ப­டு­கி­றார். அங்கு சமந்­தா­வைப்­போல பலர் வாட­கைத்­தாய் வாயி­லாக குழந்தை பெற்­றுக்­கொள்ள இருக்­கின்­ற­னர்.

குழந்தை பெற்­றுக்­கொள்­ளும் பெண்­கள் கார­ணமே இல்­லா­மல் இறந்து போவ­தால் பத­றும் சமந்தா, இறப்­புக்­கான கார­ணம் என்ன என்று ஆரா­யும்­போது பல திடுக்­கி­டும் தக­வல்­களைத் தெரிந்­து­கொள்­கி­றார்.

இறு­தி­யில் சமந்­தா­வுக்கு என்ன ஆனது என்­பதைப் பற்றி சண்­டைக் காட்­சி­கள் நிறைந்த மர்­மப் பட­மாக உரு­வாகி இருக்­கிறது 'யசோதா'.

கடந்த வாரம் வெளி­யான 'யசோதா' படத்­தில் சமந்தா சண்டை காட்­சி­களில் மிரட்டி உள்­ளார். உடல் நிலை­ச­ரி­யில்­லாத போதும் வேறு ஆள் போடா­மல் தானே அனைத்து சண்­டைக் காட்­சி­க­ளி­லும் நடிப்­பேன் என்று துணிச்­ச­லு­டன் நடித்­ததை ரசி­கர்­கள் அனை­வ­ரும் பாராட்டி வரு­கின்­ற­னர்.

வாட­கைத்­தாய் என்ற பெய­ரில் நடக்­கும் குற்­றங்­க­ளை­யும் உல­கிற்கு வெளிச்­சம் போட்டு காட்­டிய 'யசோதா' படம் வசூலை வாரிக்­

கு­வித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் நடிகை சமந்தா, 'யசோதா' படத்தை வெற்­றிப்­ப­ட­மாக்­கிய ரசி­கர்­

க­ளுக்கு நன்றி தெரி­வித்து அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

அதில், "அன்­பான பார்­வை­யா­ளர்­களே, 'யசோதா' படத்­திற்கு நீங்­கள் கொடுத்த அன்­பும் பாராட்­டும்­தான் எனக்கு கிடைத்த பரி­சாக நான் கருதுகிறேன். திரை­

ய­ரங்­கில் உங்­க­ளின் மகிழ்ச்­சி­யான சத்­த­மும் கைத்­தட்­டல்­களும் என்னை வியப்­பில் ஆழ்த்­தி­யுள்­ளது. 'யசோதா' படக்­கு­ழு­வின் ஒட்­டு­மொத்த உழைப்­புக்­கும் பலன் கிடைத்­து­விட்­டதை நினைத்து மகிழ்ச்­சி­யில் மூழ்­கி­விட்­டேன். என் மகிழ்ச்­சிக்கு வார்த்­தை­களே இல்லை.

"என்னை நம்பி 'யசோதா' படத்தை கொடுத்த தயா­ரிப்­பா­ளர் கிருஷ்ண பிர­சாத்­திற்கு என் மன­மார்ந்த நன்­றியைத் தெரி­வித்­துக்­கொள்­

கி­றேன்.

அவ­ரைப்­போல இயக்­கு­நர்­கள் ஹரி-ஹரிஷ் ஆகி­யோ­ரு­டன்

இணைந்து பணி­யாற்­றி­யது மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருந்­தது. வர­லட்­சுமி சரத்­கு­மார், உன்னி முகுந்­தன் ஆகி­யோர் அற்­பு­த­மான நடி­கர்­கள். அவர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது மகிழ்ச்சி," என்று சமந்தா அந்த பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்தப் படம் தமிழ், மலை­யா­ளம், கன்­ன­டம், இந்தி ஆகிய மொழி­களிலும் வெளி­யா­னது. இந்­நி­லை­யில் 9 நாட்­களில் இப்­ப­டம் ரூ.30 கோடி வசூலை எட்டி இருக்­கிறது.

இந்­தப் படத்­தில் நடித்­தி­ருந்த இந்தி நடி­கர் ரோகித் பட்­கர் கூறு­கை­யில், "படத்­தில் பணி­யாற்ற எனக்கு அழைப்பு வந்­த­போது கவலையாக இருந்­தது. சமந்­தா­

வு­டன் இணைந்து பணி­யாற்­று­வது ஒரு­வேளை எந்த பொழுதுபோக்கும் இல்­லா­மல் இருக்­குமோ? இல்லை நேரத்­துக்கு வந்­தோம் போனோம் என வேலை பார்க்­கும் வித­மாக இருக்­குமோ? என்­னு­டைய வேலை­பார்க்­கும் பாணி­யில் நான் சம­ர­சம் செய்­து­கொள்ள வேண்டி வருமோ? என பல எண்­ணங்­கள் ஓடிக் கொண்­டி­ருந்­தன.

"எல்­லாம் அந்த அற்­புத பெண்ணை சந்­திக்­கும் வரை­தான். அதன்­பி­றகு படப்­பி­டிப்பு தளத்­தில் அவ­ரு­டன் எனக்கு நிகழ்ந்­தது எல்­லாமே மறக்க முடி­யாத இனி­மை­யான அனு­ப­வங்­கள்­தான்.

"தன்­னு­டன் பணி­பு­ரி­யும் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் அவர் அவ்­வ­ளவு அழ­காக கவ­னித்­துக்­கொண்டு எப்­போ­தும் கல­க­லப்­பா­கவே வைத்­தி­ருந்­தார். அவ­ருக்­குள் இருந்த ஓர் உண்­மை­யான நாய­கனை, ஒரு சூப்­பர்ஸ்­டாரை, ஒரு நிஜ மனி­தனை, ஒரு நிஜ நண்­பனை நான் ஒவ்­வொரு நாளும் உணர்ந்­தேன்," என்று புகழ்ந்து பாராட்­டி­யுள்­ளார்.