காசியில் ஒலித்தது இளையராஜாவின் குரல்

காசியில் ஒலித்தது இளையராஜாவின் குரல்

1 mins read
97cdc80a-97c2-4425-97ea-8f5ff916b709
-

இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர விழாவைக் கொண்­டா­டும் வித­மாக மத்­திய அரசு சார்­பில் நாடு முழு­வ­தும் பல்­வேறு நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

இதன் ஒரு பகு­தி­யாக ஒரே பார­தம், உன்­னத பார­தம் என்ற உணர்­வு­டன், தமிழ் மொழி­யை­யும் கலா­சா­ரத்­தை­யும் முன்­னி­லைப்­ப­டுத்­தும் வகை­யில் காசி தமிழ் சங்­க­மம் நிகழ்ச்சி ஒன்று நடை­பெ­று­கிறது.

இந்­நி­கழ்ச்சியை இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி தொடங்கி வைத்­தார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பங்­கேற்ற இசை­

ய­மைப்­பா­ளர் இளை­ய­ராஜா திரைப்­படப் பாட­லான 'ஜனனி, ஜனனி' என்ற அம்­மன் பாடலைப் பாடி, தனது உரை­யைத் தொடங்­கி­னார்.

"என்­னு­டைய உணர்­வு­களை முழு­மை­யாக எப்­படி வெளிப்­

ப­டுத்­து­வது என்று தெரி­ய­வில்லை. தமிழ் சங்­க­மத்தை இந்த புண்­ணிய பூமி­யான காசி­யில் நடத்த பிர­த­மர் மோடிக்கு எப்­படி யோசனை வந்­தது என்­பதை வியந்து மகிழ்­கி­றேன். இறை­வன் உங்­க­ளுக்கு நீண்ட ஆயு­ளும் புக­ழும் கொடுக்க வாழ்த்தி விடை­பெ­று­கி­றேன்," என்று உணர்ச்­சி­பொங்க பேசி விடைபெற்றார்.