தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்' போன்ற படங்களில்
நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு,
இந்தியில் அதிகமான படங்களில் நடித்து
வருகிறார். மேலும் இந்தியில் சல்மான்கானுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து
காரணமாக சில வாரங்களாக ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்.
மிஸ்கின் இயக்கத்தில் உருவான
'முகமூடி' திரைப்படத்தின் மூலம் திரைத்
துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார்.
விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து நடிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்காததால் தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போனது.
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார்.
இவர் தற்பொழுது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'ஜன கன மன' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில், பூஜாவுக்கு மிரட்டலான சண்டைக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த காட்சிக்காக வெளிநாட்டு பயிற்சியாளரிடம் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.
இதற்கிடையில், இவர் மகேஷ் பாபுவின் 28வது படமான 'திரிவிக்கிரம்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போது காலில் அடிபட்டு நரம்பு பாதிக்கப்பட்டது. அதனால் இவர் காலில் கட்டு போட்டுக்கொண்டு வீட்டில் சிகிச்சை பெறும் படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் கவலையுடன், 'விரைந்து நலம்பெற வேண்டும்,' என்று வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
அதனால் இவர் தற்பொழுது மற்றொரு பதிவு ஒன்றை வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "விபத்துக்கு பிறகு நான் நன்றாக தேறி வருகிறேன். தற்பொழுது மகேஷ் பாபு நடிக்கும் அவரது 28வது படமான 'திரிவிக்கிரம்' என்ற படத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கிறேன்," என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா அண்மையில் காலமானதையடுத்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் மீண்டும் மகேஷ்பாபு படப்பிடிப்பில் கலந்துகொள்ளும்போது படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. மகேஷ் பாபுவுடன் பூஜா ஹெக்டே
'மகரிஷி' என்ற படத்திலும் நடித்திருந்தார்.
பூஜா காலில் அடிபட்டு, ஓய்வாக இருந்த நேரத்தில் தன்னுடைய வீட்டை கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்து குட்டி சொர்க்க பூமியாக மாற்றியுள்ளார். அந்த வீட்டைக் காணொளி எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் காணொளியில், கதவைத் திறந்து வெளியே இருப்பவர்களை பூஜா ஹெக்டே வரவேற்பதுபோல் தொடங்குகிறைது.
வீட்டிற்குள் சென்றதும் ஆறு இருக்கைகள் கொண்ட சாப்பாட்டு மேஜை அழகாக வரவேற்கிறது. மேலும், அறையின் சன்னல் மெல்லிய வெள்ளை நிற திரைகளால் மூடப்பட்டிருக்கிறது. அறையின் மறுபுறம் சமையலறை, பளிங்கு பூச்சுடன் ஒரு தீவுபோல பரந்து விரிந்து இருக்கிறது.
பூஜாவின் படுக்கை
யறையில் அவர் விரும்பிய அனைத்து படங்களின் சுவரொட்டிகளும் தொங்கவிடப்பட்டுள்ளன. அலங்கார விளக்குகள் பிரமிக்கவைக்கும் உள் அலங்கார வேலைப்பாடுகள் என ஒவ்வொன்றும் பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தாக இருக்கின்றன.
இந்த வீட்டைப் பார்த்த ரசிகர்கள் ஏக்கத்துடன் 'இது வீடா சொர்க்க பூமியா?' என மெய்மறந்து ரசித்து வருகின்றனர்.
பூஜா ஹெக்டே, 2010ஆம் ஆண்டு 'மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா' என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து புகழ் பெற்றவர். இந்தப் புகழைத் தொடர்ந்து 'மாடலிங்' துறையிலிருந்து தமிழ் சினிமாவில் 'முகமூடி' படத்தில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.

