'பொன்னியின் செல்வன் 2' படத்திற்கு மேலும் சில காட்சிகளை எடுக்கலாம் என்று முடிவெடுத்த இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடித்திருந்தவர்களிடம் கேட்டபோது மூன்று முக்கிய நடிகர்கள் சில காரணங்களைச் சொல்லி படப்
பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என்று கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில்,
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலரது நடிப்பில் வெளியான வரலாற்றுப் படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படம் வெளியாகி ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இப்படத்தில் நடித்தவர்
களுக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்களுக்குக்கூட ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தன.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடத்தியபோதே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் சேர்த்து முடித்துவிட்டார்கள்.
முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தில் மேலும் சில புதிய காட்சி களை இணைக்க முடிவெடுத்தார் இயக்குநர். அதனால் அது சம்பந்தப் பட்ட காட்சிகளைப் படமாக்க மணிரத்னம், படத்தில் நடித்த நடிகர் களை அணுகினார்.
படத்தின் மையக் கதாபாத்திரமான வந்தியத் தேவன் கதாபாத்திரத்திற்குக் கூடுதலாகக் காட்சி
களைச் சேர்க்க முடிவு செய்து கார்த்தியை மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்தார் இயக்குநர் மணிரத்னம். ஆனால், அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒத்துக்கொண்டதாலும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் நீளமான முடியை வளர்க்க முடியாது என்று சொல்லியும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என கார்த்தி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவரையடுத்து விக்ரம், ஜெயம் ரவி கதாபாத்திரங்களை கொஞ்சம் நீட்டித்து படமாக்கலாம் என அவர்களிடம் பேசியபோது அவர்களும் கார்த்தி சொன்ன அதே காரணத்தைச் சொல்லி ஒதுங்கியிருக்கிறார்கள்.
அதனால் கதாநாயகர்களை விட்டுவிட்டு ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க தற்போது முடிவு செய்து அவரிடம் பேசியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராயும் நடிக்க ஒத்துக்கொண்டு இருக்கிறார். அதற்காக படக்குழுவினர் விரைவில் மும்பை சென்று அங்கேயே காட்சி
களைப் படமாக்கப் போகிறார்களாம்.
எனவே இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரத்திற்குக் கூடுதல் காட்சிகள் வரலாம் என்று கூறப்படுகிறது.
'பொன்னியின் செல்வன்' படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம், வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி.

