சில ஆண்டுகளாகவே துல்கர் சல்மான் வித்தியாசமான கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதனால் தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட்டிலும் அவருக்கு வரவேற்பு இருக்கிறது.
இந்தியில் தற்பொழுது அவர் நடித்துள்ள 'சுப்' என்கிற திரைப்படம் இன்று நேரடியாக 'ஓடிடி' தளத்தில் வெளியாகிறது.
ஒரு கலைஞனின் பழிவாங்கல் என்கிற ஒரு வரி கதையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதற்கேற்றபடி இந்தப் படத்தில் முதன்முறையாக தொடர்ச்சியாக கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
இதுவரை தான் நடித்த படங்களிலேயே தனக்கு இந்தப் படம் ஒரு பரிசோதனை முயற்சியான படம் என்றும் இது வழக்கமான ஒரு துப்பறியும் படமாக இருக்காது. ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிற, இதயத்தை நிறுத்தி, துடிக்க வைக்கும் விதமான ஒரு மர்மமான படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

