'உங்களின் வாழ்த்து தேவை'

'உங்களின் வாழ்த்து தேவை'

1 mins read
39ab8bf9-6e6f-4e77-850c-ec2729cf068e
-

நடி­கர் கவு­தம் கார்த்­திக்­கும் நடிகை மஞ்­சிமா மோக­னும் கடந்த சில ஆண்­டு­க­ளாக காத­லித்து வந்­த­னர். அண்­மை­யில் தங்­க­ளது காதலை வெளிப்­ப­டுத்­திய நிலை­யில் வரு­கிற 28ஆம் தேதி திரு­ம­ணம் செய்ய உள்­ள­னர். இதை­யொட்டி சென்­னை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­களை இரு­வ­ரும் சந்­தித்­த­னர்.

கவு­தம் பேசும்­போது, "தேவ­ராட்­டம் படத்­தில் நடித்­த­போது நண்­பர்­க­ளாக இருந்­தோம். அதன் பிறகு எங்­க­ளுக்­குள் காதல் மலர்ந்­தது.

"நான்­தான் முத­லில் காத­லைச் சொன்­னேன். சொல்­லி­விட்டு இரண்டு நாள்­கள் பயந்­து­கொண்டே இருந்­தேன். வீட்­டில் சொன்­ன­போது ஏற்­றுக்­கொண்­டார்­கள்.

"மஞ்­சிமா உன்னை

நன்­றா­கப் பார்த்­துக்­கொள்­வார். உன்னை நல்­ல­வ­னாக மாற்­றி­விட்­டார்," என்று அப்பா சொன்­னார். இரு வீட்­டார் சம்­ம­தத்­து­டன் எங்­க­ளது திரு­ம­ணம் நெருங்­கிய குடும்­பத்­தி­னர் மட்­டும் கலந்­து­கொள்ள நடக்­கிறது.

"உங்­கள் அனை­வ­ரின் வாழ்த்­தும் தேவை. தேனி­லவு பற்றி இன்­னும் முடிவு செய்­ய­வில்லை. தற்­போது சிம்­பு­வு­டன் 'பத்து தல' படத்­தில் நடிக்­கி­றேன். என் திரு­ம­ணச் செய்தி கேட்டு சிம்பு வாழ்த்­தி­னார்," என்­றார்.