மரியா: போர் பூமியில் ஒளிரும் நட்சத்திரங்கள்

மரியா: போர் பூமியில் ஒளிரும் நட்சத்திரங்கள்

3 mins read
9595dfd7-8d05-4fc8-bf49-6356764a55a1
-

'பிரின்ஸ்' படம் பெரிய வசூ­லைப் பெற்­றுத் தந்­ததோ இல்­லையோ, அப்­ப­டத்­தின் நாயகி மரி­யா­வுக்கு ரசி­கர் கூட்­டத்தைப் பெற்­றுத் தந்­துள்­ளது.

உக்­ரே­னில் இருந்து வந்து இந்­தித் திரை­யு­ல­கில் கால்­ப­தித்த மரியா, அங்­குள்ள பல்­கலைக்­க­ழ­கத்­தில் பட்­டப்­ப­டிப்பை முடித்­த­வர். பிறகு நடிப்­பின் மீதான ஆர்­வம் கார­ண­மாக நடிப்­புப் பயிற்­சி­யும் பெற்­றுள்­ளார்.

இந்தி இணை­யத்­தொ­டர் மூலம் ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மான மரியா, கதா­நா­யகி வேடங்­களை எல்­லாம் எதிர்­பார்க்­க­வில்­லை­யாம்.

தனது நடிப்­புப் பசிக்­குத் தீனி கிடைத்­தால், அதுவே போது­மானது என்ற முடி­வு­டன்­தான் இந்­தி­யா­வுக்கு வந்­தா­ராம்.

"தமிழ்ப் படத்­தில் நடிப்­ப­தற்­கான வாய்ப்பு எதிர்­பா­ராத வகை­யில்­தான் கிடைத்­தது. நானும் என் மேலாளரும் இதுபோன்ற மொழிப் படங்­களில்­தான் வாய்ப்பு தேட வேண்­டும் என்று முடிவு செய்­ய­வில்லை. நல்ல கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தால் மொழி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்­ப­து­தான் எங்­கள் முடி­வாக இருந்­தது.

"அந்­தச் சம­யத்­தில்­தான் 'பிரின்ஸ்' பட வாய்ப்பு தேடி வந்­தது. நான் எதிர்­பார்த்த கதா­பாத்­தி­ரம் அமைந்­த­தால் மகிழ்ச்சி அடைந்­தேன். இன்று உல­கெங்­கும் உள்ள தமிழ் ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மான நடி­கை­யாகி ­விட்­டேன்," என்று உற்­சா­கத் துள்­ள­லு­டன் பேசு­கி­றார் மரியா.

தர­மான தமிழ்ப் படங்­கள் சில­வற்றை தொடர்ந்து பார்த்து வரு­கி­றா­ராம். அவற்­றுள் 'வாழ்' பட­மும் ஒன்று.

"அந்­தப் படத்தை சிவ­கார்த்­தி­கே­யன்தான் தயாரித்­தார் என்­பது எனக்குத் தெரி­யாது. விமா­னத்­தில் பறந்து கொண்­டி­ருந்­த­போதுதான் பார்த்­தேன். ரொம்­பப் பிடித்­தி­ருந்­தது.

"இப்­போது இந்­திப் படங் ­க­ளை­யும் பார்க்கத்தொடங்கி உள்­ளேன். இந்­திய திரைத்­துறை மிகப் பிரம்­மாண்­ட­மா­னது. இந்­தி­யில் வெளி­யான '3 இடி­யட்ஸ்' படத்­தைப் பல­முறை பார்த்­தும் இன்­னும் சலிக்­க­வில்லை," என்று சொல்­லும் மரியா, தாம் உக்­ரேன் குடி­ம­கள் என்று சொல்­வ­தில் பெருமை கொள்­வ­தா­கக் கூறுகிறார்.

தங்­க­ளு­டைய வாழ்க்கைமுறை இயற்­கையைச் சார்ந்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், சூரி­யனை நாள்­தோ­றும் வணங்­கு­வ­தா­க­வும் இயற்­கைதான் தங்­கள் கட­வுள் என்­றும் சொல்­கி­றார்.

"எங்­க­ளு­டைய வர­லாறு மிகப் பழமை வாய்ந்­தது. நிறைய கதை­கள் உள்­ளன. ஏரா­ள­மான திற­மை­சா­லி­க­ளைக் கொண்ட அழ­கான நாடு.

"ஆனால் போர்ப்பூமி­யாக மாறி­விட்­ட­தால், அனைத்­தும் நிலை­கு­லைந்து காணப்­ப­டு­கிறது. கடந்த 1991ஆம் ஆண்­டு­தான் சுதந்­தி­ரம் பெற்­றோம். அதை மன­தாரக்கொண்­டாடி மகிழ்வதற்­குள் அடுத்த போர் தொடங்­கி­விட்­டது.

"அத­னால்­தான் கலை­களை வளர்க்க முடி­ய­வில்லை. உக்­ரேனை பற்­றிய கதை­கள், திரைப்­ப­டங்­க­ளி­லும் கூட எங்­கள் மக்­கள் எதிர்­கொண்ட துன்­பங்­கள், இப்­போது காணப்­படும் அவ­லங்­கள் ஆகி­ய­வற்றைத் தான் காட்சிப்­ப­டுத்­து­கின்­ற­னர்.

"எங்­க­ளுடைய பெரு­மை­களை, கடந்த காலத்­துச் சாத­னை­க­ளைப் பற்றி பேசும் காலம் விரை­வில் வரும். எங்கள் நாட்டில் திறமைமிக்க பல நட்சத்திரங்கள் உள்ளனர். போர்ப் பூமியில் ஒளிரும் அந்த நட்சத் திரங்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பார்கள்.

"எனக்கு கிடைத்ததுபோல் எல்லாருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். அப்போது தான் கலைகள் வளரும், கலை ஞர்களும் நன்றாக இருப்பார்கள்," என்று கண்­களில் நம்­பிக்கை ஒளிர, தேசப்­பற்­று­டன் பேசுகிறார் மரியா.

பிடித்த நடி­கர், நடி­கை­யர் எனும் தனிப் பட்­டி­யல் எல்லாம் தம்­மி­டம் இல்லை என்று குறிப்­பி­டு­ப­வர், ஒட்­டு­மொத்த தமிழ்த் திரை­யு­ல­கத்­தை­யும் ரசி­கர்­க­ளை­யும் தாம் மிக­வும் நேசிப்­ப­தா­கச் சொல் கிறார்.

மரி­யா­வின் அடுத்த படம் குறித்த அறி­விப்பு மிக விரை­வில் வெளி­யா­கு­மாம்.