'இந்தக் கதையில் நடிக்க ஏன்தான் ஒப்புக்கொண்டோமோ என வருந்தினேன்'

'இந்தக் கதையில் நடிக்க ஏன்தான் ஒப்புக்கொண்டோமோ என வருந்தினேன்'

2 mins read
14243e0b-ea1a-448e-bb51-7ac5b16718e2
-

'நந்­தன்' படம் குறித்த பேச்­சும் எதிர்­பார்ப்­பு­களும் கோடம்­பாக்­கத்­தில் அதி­க­ரித்த வண்­ணம் உள்ளன. கார­ணம், இந்­தப் படத்­துக்­காக தனது தோற்­றத்தை முற்­றி­லு­மாக மாற்­றிக்­கொண்­டுள்­ளார் பட நாய

கன் சசி­கு­மார்.

ஏற்ற இறக்­க­மா­கக் கட்­டிய லுங்கி, ஒரு வார அழுக்­குச் சட்டை, சீவாத தலை­முடி, பழைய ரப்­பர் செருப்­பு­டன் வலம் வரும் சசியை அவ­ரது வீட்­டா­ருக்கே அடை­யா­ளம் தெரி­யாது. அந்த அள­வுக்கு கதா­பாத்­தி­ர­மா­கவே மாறி­விட்­டார்.

"இது நந்­தன் என்ற தனி மனி­தனின் கதை அல்ல. ஏரா­ள­மான நந்­தன்­க­ளின் கதை. கல­க­லப்­பும் துய­ர­மும் கலந்­துள்ள சாமா­னி­யர்­களின் வாழ்க்­கைப் பதிவு. அவர்­களில் ஒரு­வன்­தான் என் படத்­தின் கதா­நா­ய­கன். அவ­னுக்­குத் தெரிந்­த­தெல்­லாம் விசு­வா­ச­மும் உண்­மை­யும்­தான்.

"ரக­ளை­யும் சிரிப்­பு­மாகச் சென்று கொண்­டி­ருக்­கும் அவ­னது வாழ்க்­கை­யில், திடீ­ரென அர­சி­யல் விளை­யா­டத் தொடங்­கு­கிறது. குட்­டக்­குட்­டக் குனி­யும் நந்­த­னால் ஏதும் செய்ய முடி­யாத நிலை.

"இரண்டு முறை அடி­வாங்­கி­விட்­டால், மூன்­றா­வது முறை எதிரி­யைப் பாய்ந்து அடிப்­ப­வன் அல்ல இந்­தக் கதா­நா­ய­கன். உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால், ஒரு கட்­டத்­தில் இந்­தக் கதை­யில் நடிக்க ஏன்­தான் ஒப்­புக்­கொண்­டோமோ என்று நான் வருத்­தப்பட்டிருக்கிறேன். இந்­தக் கதை அவ்­வ­ளவு வலி­யானது, கொடு­மை­யா­னது," என்கி­றார் சசி­கு­மார்.

இயக்­கு­நர் சர­வ­ணன் இந்­தக் கதையை முத­லில் சசி­கு­மா­ரி­டம்­தான் சொன்­னா­ராம். முழு­மை­யாகக் கேட்டு முடித்ததும் கதை நாயகனாக கரு­ணாஸ் நடித்­தால் நன்­றாக இருக்­கும் என்­றேன். கரு­ணா­ஸுக்­கும் கதை பிடித்­தி­ருந்­த­து. ஆனால் கரு­ணாஸ், சூரி என்று ஒரு சுற்று சுற்­றி­விட்டு மீண்­டும் என்­னி­டமே திரும்பி வந்­தது இந்­தக் கதை.

"இயக்­கு­நர் சர­வ­ணன் எனது பதி­னைந்து ஆண்­டு­கால நண்­பர். அத­னால் அவர் கேட்­ட­தும் மறுக்க முடி­யா­மல் துணிந்து கள­மி­றங்­கி­விட்­டேன். அத­னால்­தான் எனது தோற்­றத்­தில் இந்த தலை­கீழ் மாற்றம்," என்று விளக்­கம் அளிக்­கி­றார் சசி­கு­மா­ரர்.

கதை நாய­க­னாக தனக்­கான கதா­பாத்­தி­ரத்தை உள்­வாங்­கத்­தான் மிக­வும் சிர­மப்­பட்­டா­ராம். முதல்­நாள் படப்­பி­டிப்­பின்­போது, கதா­நா­ய­கன் நெருக்­க­டி­யில் சிக்­கித் தவிக்­கும் காட்­சி­யைப் பட­மாக்கி உள்­ள­னர். அதில் மெனக்­கெட்டு நடித்­த­போது ஒட்­டு­மொத்­த படக்­கு­ழு­வும் கைதட்டி உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"இயக்­கு­நர் சொன்ன கதை­யின் உயிர் என்­னுள் மெல்ல மெல்­லத்­தான் இறங்­கி­யது. அதை உணர்ந்­த­தும், படப்­பி­டிப்பை தொடர்ந்து நடத்­துங்­கள் என்­று­கூ­றி­விட்டு, சுமார் ஒரு­வார காலம் ஒதுங்­கி­விட்­டேன். அந்­தச் சம­யத்­தில் அமை­தி­யாக யோசித்து, சில­வற்றை முடிவு செய்து, அதன்பிற­கு­தான் படப்­பிடிப்­பில் பங்­கேற்­றேன்," என்­கி­றார் சசி.

கூ­லி­களாக காலங்­கா­ல­மாக அல்­லா­டும் ஒரு கூட்­டத்­தின் கதை இது. ஏச்­சுப் பேச்­சு­கள், அவ­மா­னங்­கள், இழப்பு­கள் என எது­வும் அவர்­க­ளி­டம் எந்­த­வித சல­னத்­தை­யும் ஏற்­ப­டுத்­தாது.

"அவர்களைப் பற்றி விரிவாக பதிவு செய்துள்ளேன். இது அனை வரும் தெரிந்துகொள்ள வேண்டும்," என்கிறார் இயக்குநர் சரவணன்.