'இந்த இடம் போதும்'

'இந்த இடம் போதும்'

3 mins read
f812e456-eb38-494a-bc48-c00d876a07eb
-

அஞ்­சலி அறி­மு­க­மாகி 16 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன. இது­நாள் வரை திரை­யு­ல­கில் தொடர்ந்து பணி­யாற்றி வரு­வ­தையே தாம் பெரிய சாத­னை­யா­கக் கரு­து­வதாகச் சொல்­கி­றார்.

இன்று திரை­யு­ல­கில் தமக்கு கிடைத்­துள்ள இடம் மன­நி­றைவை அளித்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், பெரிய இலக்­கு­கள் ஏதும் தமக்கு இல்லை என்­கி­றார்.

அண்­மைக்­கா­ல­மாக இணை­யத் தொடர்­களில் நடிப்­ப­தற்­கான வாய்ப்­பு­களும் தேடி வரு­கின்­ற­ன­வாம். அஞ்சலி நடிப்­பில் வெளி­யான இரு தொடர்­க­ளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்­துள்­ளது.

"கடந்த ஆண்டு 'நவ­ரசா', 'பாவ கதை­கள்' ஆகிய இரு தொடர்­களில் நடித்­தி­ருந்­தேன். அதன் பிறகு 'ஜான்சி', 'ஃபால்' ஆகிய இரு தொடர்­களில் ஒப்­பந்­த­மா­னேன்.

"ஒரு தொட­ரில் எனது நினை­வாற்­றலை இழந்த நிலை­யில், பல கேள்­வி­க­ளுக்கு விடை தேடி அலை­யும் பெண்­ணின் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளேன். அதி­கம் பேசாத அமை­தி­யான பெண் என்­றா­லும் மன­த­ள­வில் துணிச்­சல் மிக்­க­வ­ளாக கச்­சி­த­மாக நடித்த வகை­யில் பாராட்டுகள் குவிந்­தன.

"'ஜான்சி' தொட­ரைப் பொறுத்தவரையில் சண்­டைப் பயிற்­சி­யும் பெற்­றேன். இத்­தகைய அனு­ப­வங்­கள் அலா­தி­யா­னவை. அதே­ச­ம­யம் நீண்­ட­கா­லம் ஒரே துறை­யில் பணி­யாற்­றும்­போது நமது கடந்­த­கால அனு­ப­வங்­களும் கைகொ­டுக்­கும்," என்­கி­றார் அஞ்சலி.

ஒரு திரைப்­ப­டம் அல்­லது இணை­யத் தொட­ரில் நடிக்க ஒப்­புக்­கொள்­ளும் முன்பு அவற்றின் கதை மன­தைக் கவ­ரும் வகை­யில் உள்­ளதா என்­ப­தை­த்தான் முத­லில் கவ­னிப்­பா­ராம். அதன்பிறகே தமக்­கான கதா­பாத்­தி­ரம் குறித்து கேட்­ட­றி­வ­தா­கச் சொல்­கி­றார்.

"எனது கதா­பாத்­தி­ரம் மூலம் புதி­தாக ஏதே­னும் முயற்சி செய்ய முடி­யுமா, வித்­தி­யா­ச­மாக நடிக்க வாய்ப்­புள்­ளதா என்­ப­தை­யும் கவ­னிப்­பேன். மேலும், ஒரு கதை­யின், கதா­பாத்­தி­ரத்­தின் ஆழம் குறித்து அல­சும்­போது பல விஷ­யங்­கள் புரி­படும்.

"நான் ஏற்­று நடிக்­கும் கதா­பாத்­தி­ரத்தை முழு­மை­யா­கப் புரிந்­து­கொள்ள முயற்சி செய்வேன். கதை­யின் அடுத்­த­கட்ட நகர்­வு­க­ளுக்கு எனது கதா­பாத்­தி­ரம் எந்த அளவு துணை நிற்­கும் என்­ப­தும் முக்­கி­யம். ரசி­கர்­கள் மன­தில் நிலைத்து நிற்­கும் வகை­யி­லான பாத்­தி­ரங்­கள்­தான் எனது விருப்­பம்.

"இன்­று­வரை அப்­ப­டிப்­பட்ட வேடங்­க­ளுக்­கு­த்தான் முன்­னுரிமை அளிக்­கி­றேன். அது மட்­டு­மல்ல, ஒரு படத்­துக்­கான கதை, திரைக்­க­தையை அச்­சிட்டு கேட்டு வாங்­கிப் படிப்­ப­தை­விட, இயக்­கு­நரே அதை விவ­ரிக்­கும்­போது கேட்­ப­து­தான் எனக்­குப் பிடிக்­கும். ஓர் இயக்­கு­ந­ரால், தாம் எதிர்­பார்க்­கும் உணர்­வு­களை அழ­காக எடுத்­துச் சொல்ல முடி­யும்," என்­கி­றார் அஞ்­சலி.

'இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கச்சிதமாக நடிக்கக்கூடிய நடிகை' என்று பெயர் வாங்குவதில்தான் தமக்கு விருப்பம் என்ற குறிப்பிடுபவர், இந்த இலக்கை எட்டுவதற்கு தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்.

'இயக்குநரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கச்சிதமாக நடிக்கக்கூடிய நடிகை' என்று பெயர் வாங்குவதில்தான் தமக்கு விருப்பம் என்று குறிப்பிடுபவர், இந்த இலக்கை எட்டுவதற்கு தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிடைத்துள்ளதாகச் சொல்கிறார்.

"திரையுலகில் அறிமுகமான வேளையில் நடித்த 'கற்றது தமிழ்' படத்தில் எனக்கு கனமான கதாபாத்திரமாக அமைந்தது. அச்சமயம் எப்போதுமே பதற்றமாக உணர்வேன்.

"அடுத்து 'அங்காடி தெரு' படத்தில் நடிப்பதற்குள் ஓரளவு அனுபவம் பெற்ற உணர்வு இருந்தது. அதனால் பதற்றமின்றி நடிக்க முடிந்தது.

"இப்போது ஒரு கதையை எவ்வாறு அணுக வேண்டும், திரையில் எப்படித் தோன்ற வேண்டும் என்பது குறித்தெல்லாம் தீர்மானிக்க அனுபவ அறிவு உள்ளது," என்று சொல்லும் அஞ்சலி, காதல், திருமணம் குறித்தெல்லாம் பேசுவதற்கு தமக்கு விருப்பமோ, நேரமோ இல்லை என்கிறார்.

திருமணம் நடக்கும் பட்சத்தில் அதுகுறித்த அறிவிப்பை வெளிப்படையாக வெளியிடுவதில் தமக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்கிறார். நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாக முன்பு ஒரு தகவல் வெளியானது. எனினும் அதை இருவரும் உறுதி செய்யவில்லை.

, :

  