'ஒப்பனைக்காக ஏழு மணி நேரம்'

'ஒப்பனைக்காக ஏழு மணி நேரம்'

1 mins read
f9f5eb13-d901-46c1-965a-679707307f8e
-

நடி­கர் கமல்­ஹா­ச­னின் அர்ப்­பணிப்­பை­யும் உழைப்­பை­யும் நேரில் கண்­ட­போது வியப்­பாக இருந்­த­தா­கச் சொல்­கி­றார் ரகுல் பிரீத் சிங். 'இந்­தி­யன்-2' படத்­தில் நாயகி­யாக நடித்து வரும் ரகுல், கமலை­விட சிறந்த கலை­ஞரை தாம் இன்­னும் சந்­திக்­க­வில்லை என்­கி­றார்.

"இந்­தப் படத்­தில் 90 வயது முதி­ய­வ­ராக நடிக்­கி­றார் கமல். இதற்­கான ஒப்­ப­னை­யைப் போட்­டுக்­கொள்ள அவ­ருக்கு ஐந்து மணி நேரம் தேவைப்­படும். அதனால் அதி­காலை ஐந்து மணிக்­கெல்­லாம் படப்­பி­டிப்புத் தளத்­துக்கு வந்­து­வி­டு­வார்.

"அதன் பிறகு முழு­மை­யாக ஒப்­பனை போட்­டுக்­கொண்டு கேமரா முன் வந்து நிற்க காலை பத்து மணி­யா­கி­வி­டும். அதே­போல் ஒப்­ப­னை­யைக் கலைப்­பதற்கு இரண்டு மணி நேரம் தேவைப்­படும்.

"வானிலை வெப்­ப­மாக இருக்கும்­போது இது­போன்ற ஒப்பனையை தாங்­கிக்கொண்டு நடிப்­பது மிக­வும் கடி­னம். ஆனால் கமல் எதற்­கா­க­வும் அலுத்­துக் கொள்­ளா­மல் நடிக்­கி­றார். தமது வாழ்­நா­ளில் 75 விழுக்­காட்டை சினி­மா­வுக்­கா­கவே ஒதுக்­கி­விட்ட அந்­தக் கலை­ஞ­ரு­டன் இணைந்து நடிப்­ப­தை­விட அரு­மை­யான அனு­ப­வம் இருக்கமுடி­யாது. அதே­போல் சினிமா குறித்து அவ­ரை­விட வேறு யாருக்­கும் அதி­கம் தெரிந்­தி­ருக்­காது," எனப் பாராட்­டு­கி­றார் ரகுல்.