திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள 'ராங்கி' படம் நீண்ட தாமதத்துக்குப் பின் வெளியீடு கண்டுள்ளது.
படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் முப்பது காட்சிகளை நீக்கிவிட்டனராம். அதனால்தான் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்கிறார் இயக்குநர் எம்.சரவணன்.
"அமெரிக்கா, டாலர், லிபியா, இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பு, எஃப்பிஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற முப்பது காட்சிகளைத்தான் தணிக்கைக் குழுவினர் நீக்கினர். அவற்றை எடுத்த பிறகே 'யு/ஏ' வகையில் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது. இதற்கு முன்பு வெளியான சில படங்களில் இருந்த வார்த்தைகளையே நாங்களும் பயன்படுத்தினோம்.
"ஓர் இளம் பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினையில் அனைத்துலக குழுக்களுக்குத் தொடர்பு இருப்பது போன்று திரைக்கதை அமைத்துள்ளோம். அதனால்தான் வெளிநாடுகளுடன் தொடர்புடைய காட்சிகள் இடம்பெற்றன," என்கிறார் சரவணன்.

