'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளாராம்.
முதல் பாகத்தின் பிரம்மாண்டம் அடுத்த பாகத்திலும் தொடர வேண்டும் என்று விரும்புவதால், அதற்கேற்ப அவர் திட்டமிட்டு வருவதாகத் தகவல். குறிப்பாக கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்த உள்ளாராம்.
"இரண்டாம் பாகத்தின் பல்வேறு காட்சிகளைப் படமாக்க படக்குழுவினர் பிப்ரவரி மாதம் தாய்லாந்து செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு திரிஷா, விக்ரம் சம்பந்தப்பட்ட முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
"அதன் பிறகு தமிழகத்திலும் சில நாள்கள் படப்பிடிப்பு நடக்கக்கூடும். அதன் பிறகு தொழில்நுட்பப் பணிகளில் மணிரத்னம் கவனம் செலுத்துவார்," என்று விவரம் அறிந்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரிடமும் ஒரு வார காலத்துக்கு கால்ஷீட் ஒதுக்கித் தரும்படி மணிரத்னம் கேட்டுள்ளாராம்.

