சூர்யாவுக்குப் பதில் அருண்

சூர்யாவுக்குப் பதில் அருண்

1 mins read
a653b824-a75a-493e-b86b-f81d526719f4
-

பாலா இயக்­கும் 'வணங்­கான்' படத்­தில் இருந்து சூர்யா வில­கி­யதை அடுத்து, அதில் நடிக்­கப் போகும் நாய­கன் யார் எனும் எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அருண் விஜய்­யி­டம் இயக்­கு­நர் பாலா கதை சொல்லி இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

பெரும் எதிர்­பார்ப்­பு­க­ளு­டன் 'வணங்­கான்' படத்­துக்­கான படப்­பி­டிப்பு தொடங்­கி­யது. சில நாள்­கள் சிக்­க­லின்றி எல்­லாம் நடந்து கொண்­டி­ருந்த நிலை­யில், திடீ­ரென படத்­தின் கதை­யில் பாலா சில மாற்­றங்­க­ளைச் செய்­த­தா­க­வும் சூர்யா­வுக்கு அதில் உடன்­பா­டில்லை என­வும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் இரு­வ­ரும் மனம்­விட்­டுப் பேசி­யதை அடுத்து, சூர்யா அந்­தப் படத்­தில் இருந்து வில­கிக் கொண்­டார். அவ­ருக்­குப் பதில் அருண் விஜய் பொருத்­த­மாக இருப்­பார் எனக் கரு­தி­னா­ராம் பாலா.

இடை­யில், தயா­ரிப்­புத் தரப்­பில் அதர்­வா­வின் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்­ட­தா­க­வும் அதற்­குப் பாலா ஒப்­பு­தல் வழங்­க­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது. எதிர்­வ­ரும் பிப்­ரவரி மாதம் மீண்­டும் படப்­பி­டிப்பு தொடங்­கும் என்­றும் அருண் விஜய் அதில் பங்­கேற்­பார் என்­றும் கூறப்­ப­டு­கிறது.