நேரில் கண்டு ரசித்த யுவன்

நேரில் கண்டு ரசித்த யுவன்

1 mins read
bf8a137e-2292-4334-8b22-4936917bad8a
-

காற்பந்துக் காய்ச்­சல் தமிழ்த் திரை­யு­ல­கத்­தை­யும் விட்டு வைக்­க­வில்லை. இசை­ய­மைப்­பா­ளர் யுவன் சங்­கர் ராஜா, உல­கக் கிண்ண போட்­டி­யின் இறுதி ஆட்­டத்தை நேரில் கண்டு ரசித்­துள்­ளார்.

கேரள மாநில மக்­க­ளுக்கு காற்பந்து விளை­யாட்­டில் ஆர்­வம் அதி­கம். இம்­முறை மலை­யாள திரைக்­கலை­ஞர்­கள் பல­ரும் கத்­தா­ரில் நடை­பெற்ற உல­கக் கிண்ண காற்பந்துப் போட்­டியை நேரில் காணச் சென்­றி­ருந்­த­னர்.

அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­படங்­களை நடி­கர் மம்­மூட்டி சமூக ஊட­கங்­களில் வெளி­யிட்­டார். இந்­நி­லை­யில், யுவன் சங்­கர் ராஜா­வும் தாம் திட­லில் இருக்­கும்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டத்தை ரசி­கர்­க­ளுக்­கா­கப் பகிர்ந்து கொண்­டுள்­ளார்.

இறு­திப் போட்­டியை நேரில் கண்­டு­க­ளிக்­கும் வாய்ப்பு கைகூ­டி­யது மகிழ்ச்சி அளிப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.