'இன்னும் சாதிக்க ஆசை'

'இன்னும் சாதிக்க ஆசை'

3 mins read
941ecec2-fe68-4bb4-a688-ff75775b429b
-

திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி இரு­பது ஆண்­டு­க­ளைக் கடந்­துள்­ளார் நயன்­தாரா. முதல் படத்­தில் நடித்­த­போது தமக்கு 18 வயது என்­றும் அச்­ச­ம­யம் பெரிய இலக்­கு­கள் அல்­லது லட்­சி­யம் என்று எது­வும் இல்லை என்­றும் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

அந்த வய­தில் எதிர்­பார்ப்­பு­கள் ஏதும் இல்லை என்­றும் எனி­னும் சில படங்­களில் நடித்து முடித்த பின்­னர் திரை­யு­ல­கில் ஏதே­னும் ஓர் ஒரத்­தில் தமது பெய­ரும் இடம்­பெற்­றால் அதுவே போதும் என்ற எண்­ணம் இருந்­த­தா­க­வும் கூறி­யுள்­ளார் நயன்­தாரா.

"ஓர­ளவு அனு­ப­வம் பெற்­ற­தும் வித்­தி­யா­ச­மான கதை­கள், கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க வேண்­டும் என்ற எண்­ணம் ஏற்­பட்­டது. அந்­தச் சம­யத்­தில் கதா­நா­ய­கி­க­ளுக்கு பெரி­தாக முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­ட­வில்லை. பாடல் வெளி­யீடு அல்­லது படத்­துக்­கான விளம்­பர நிகழ்­வு­களில் நம்­மைக் கண்­டு­கொள்ள மாட்­டார்­கள்.

"ஓர­மாக நிற்க வேண்­டி­யி­ருக்­கும். எப்­போ­தே­னும் ஒரு­முறை கதா­நா­யகி குறித்து இரண்­டொரு வார்த்­தை­கள் குறிப்­பி­டு­வார்­கள். இதன் கார­ண­மா­கவே நான் ஒரு படத்­தின் எந்­த­வொரு விளம்­பர நிகழ்­வு­க­ளி­லும் பங்­கேற்­ப­தில்லை என­லாம்.

"பின்­னாள்­களில் நாய­கிக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் படங்­களில் நடிக்­கத் தொடங்­கி­னேன். இப்­போது நிலைமை மாறி­விட்­டது.

"இன்று பெண் கதா­பாத்­தி­ரங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தும் கதை­கள் அதிக அள­வில் வரு­கின்­றன. இது­போன்ற படங்­களைத் தயா­ரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன் வரு­கி­றார்­கள்," என்­கி­றார் நயன்­தாரா.

திரு­ம­ணத்­துக்­குப் பின்­னர் தமது திரை­யு­ல­கப் பய­ணத்­தில் பெரி­தாக எந்த மாற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அவ்­வாறு எந்த மாற்­ற­மும் ஏற்­பட வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று தெரி­வித்­துள்­ளார்.

"நாய­கியை மையப்­ப­டுத்­தும் படங்­க­ளைத் தயா­ரிக்க பல தயா­ரிப்­பா­ளர் முன்­வ­ரு­கின்­ற­னர். இது வர­வேற்­கத்­தக்க மாற்­றம். எங்­க­ளைப் போன்ற நாய­கி­கள் மீது தயா­ரிப்­பா­ளர்­கள் நம்­பிக்கை வைத்­துள்­ள­னர். அத­னால் இயக்­கு­நர்­க­ளுக்­கும் நம்­பிக்கை ஏற்­பட்டு, எங்­க­ளுக்­கேற்ற கதை­களை உரு­வாக்­கத் தொடங்கி உள்­ள­னர்.

"இதற்கு ரசி­கர்­களும் முக்­கி­யக் கார­ணம். நாய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்­க­ளைக் காண ரசி­கர்­கள் இப்­போது திரை­ய­ரங்­கு­க­ளுக்கு வரு­கி­றார்­கள். அத­னால் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு நஷ்­டம் ஏற்­ப­டு­வ­தில்லை. பல படங்­கள் லாபத்­தைப் பெற்­றுத் தரு­கின்­றன.

"என்­னைப் பொறுத்­த­வரை அடுத்த கட்­டத்­துக்­குப் போக விரும்­பு­கி­றேன். முன்­னணி நாய­கர்­க­ளின் படங்­க­ளுக்கு கோடிக்­க­ணக்­கில் செல­வி­டும் தயா­ரிப்­பா­ளர்­கள் உள்­ள­னர். அவர்­கள் எங்­க­ளைப் போன்ற நாய­கி­களை வைத்து அது­போன்ற படங்­க­ளைத் தயா­ரித்­தால் நன்­றாக இருக்­கும்," என்­கி­றார் நயன்­தாரா.

இதற்­காக தாம் சில முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், திரை­யு­ல­கில் தாம் தொடர்ந்து பல­வற்றை முயற்சி செய்து வந்­துள்­ள­தா­க­வும் மேலும் சில­வற்­றைச் சாதிக்க விரும்­பு­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

அழகு, ஒப்­பனை குறித்த கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளித்­துள்ள அவர், ஒப்­பனை என்­பது நடி­கை­க­ளின் அன்­றாட வாழ்க்­கை­யோடு இணைந்­து­விட்ட விஷ­யம் என்­றார்.

"பொது­வாக ஒப்­பனை என்­பது பெண்­க­ளுக்கு தங்­கள் அழகை மெரு­கூட்ட உத­வும். ஆனால் என்­னைப் பொறுத்­த­வரை ஒப்­ப­னைப் பொருள்­களை தெய்­வ­மா­கக் கரு­து­கி­றேன்," என்று நயன்­தாரா தெரி­வித்­துள்­ளார்.

திரு­மண வாழ்க்கை இனிதே சென்று கொண்­டி­ருப்­ப­தா­க­வும் தமது தொழில் ரீதி­யி­லான விஷ­யங்­களில் பெரிய மாற்­றங்­கள் ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் சொல்­கி­றார்.

"விக்­னேஷ் சிவனை எனக்கு ஒன்­பது ஆண்டு­களா­கத் தெரி­யும். அன்று முதல் இன்­று­வரை இரு­வ­ரும் ஒரே மாதி­ரி­யா­கத்­தான் உள்­ளோம். இப்­போது இரு­வருக்­கும் திரு­ம­ண­மா­கி­விட்­டது என்­பது மட்­டுமே வித்­தி­யா­சம்," என்­கி­றார் நயன்­தாரா.

விக்­னேஷ் சிவன் அடுத்து அஜித்தை வைத்து படம் இயக்­கும் நிலை­யில், நயன்­தாரா அதில் நாய­கி­யாக நடிக்க உள்­ளார்.

அந்­தப் படத்­துக்­கான பணி­களில் விக்­னேஷ் கவ­னம் செலுத்தி வரு­கி­றா­ராம்.

நயன்­தா­ரா­வும் அடுத்த படங்­களில் நடிப்­ப­து­டன் இரு­வ­ரும் தங்­க­ளது படத் தயா­ரிப்­புப் பணி­க­ளி­லும் கவ­னம் செலுத்து­கின்­ற­னர்.

, :   