மீனா: நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயை நினைத்துப் பொறாமைப்பட்டேன்

மீனா: நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயை நினைத்துப் பொறாமைப்பட்டேன்

2 mins read
43e9b590-7eb5-4c0b-b715-9e406346d548
-

'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் இடம்­பெற்­றுள்ள நந்­தினி கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வேண்­டும் என்பது­தான் தனது நெடு­நாள் விருப்­பம் என்­கி­றார் மீனா.

திரை­யு­ல­கில் இவர் அறி­மு­க­மாகி நாற்­பது ஆண்­டு­கள் கடந்­துவிட்டன. தமது திரைப் பய­ணத்­தில் பல்­வேறு வாய்ப்­பு­களை இழந்­தி­ருந்­தா­லும், நந்­தினி கதா­பாத்­தி­ரத்­தில் ஐஸ்­வர்யா ராய் நடித்­தது தம்­மைப் பொறா­மைப்­பட வைத்­த­தாக பேட்டி ஒன்­றில் வெளிப்­ப­டை­யா­க­வும் உண்மை­யில் பொறாமை இன்­றி­யும் குறிப்­பிட்­டுள்­ளார் மீனா.

கண­வரை இழந்து வாடிய வேளை­யில், தன்­னைப் பற்றி வெளி­யான உண்­மைக்­குப் புறம்­பான தகவல்­க­ளால் மிகுந்த வேதனை அடைந்­தார், இப்­போது மீண்­டும் வழக்­க­மான பணி­களில் ஈடு­பட்டுள்­ளார். அண்­மைய பேட்­டி­யில் அவர் கூறி­ய­தைக் கேட்­போம்:

"எனது திரை­யு­ல­கப் பய­ணம் இவ்­வ­ளவு நாள் நீடிக்­கும் என்­றும் ஏரா­ள­மான படங்­களில் நடிப்­பேன் என்­றும் கன­வில்­கூட நினைத்­த­தில்லை. திரு­ம­ணத்­துக்­குப் பிறகு வாய்ப்­பு­கள் தேடி வராது என்­று­தான் நினைத்­தேன். ஆனால் 'த்ரிஷ்யம்' போன்ற நல்ல பட வாய்ப்பு­கள் கிடைப்­பது ஆச்சரியமாக உள்­ளது.

"ஓர­ளவு பெயர் வாங்­கிய பிறகு முன்­னணி நாய­கர்­க­ளு­டன் நடித்­தேன். எனி­னும் அன்­றைய வேக­மான ஓட்­டத்­தில் கதை கேட்டு நான் நடிக்கமுடி­யா­மல் போன படங்­க­ளின் எண்­ணிக்கை அதி­கம்.

"அப்­ப­டித்­தான் 'தேவர் மகன்' படப்­பி­டிப்­பில் கலந்து கொண்­டேன். ஆனால் கால்­ஷீட் பிரச்­சி­னை­யால் தொடக்­கத்­திலேயே நான் விலக வேண்­டி­ய­தா­யிற்று. 'பஞ்­ச­வர்­ணம்' கதா­பாத்­தி­ரத்­தில் ரேவதி நடித்­துப் பெயர் வாங்­கி­னார். அந்­தப் படத்துக்­காக அவ­ருக்கு தேசிய விருது கிடைத்­த­போது, நாம் நடிக்­கா­மல் வில­கி­விட்­டோமே என்று தோன்­றி­யது.

"பொன்­னி­யின் செல்­வன்' நாவ­லைப் படித்து வியந்திருக்கிறேன். அதைப் பட­மாகவோ, தொட­ரா­கவோ தயா­ரித்­தால் அந்த நாவ­லில் வரும் 'நந்­தினி' கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க விரும்­பி­னேன். அத­னால் 'பொன்­னி­யின் செல்­வன்' திரைப்­ப­டம் குறித்த தக­வல்­கள் வெளி­யா­ன­போது, தொடர்ந்து ஆர்­வத்­து­டன் கவ­னித்து வந்­தேன்.

"அழகு, நடிப்பு என மொத்­தக் கதை­யி­லும் 'நந்­தினி' கதா­பாத்­தி­ரம் பெரிய தூணாக இருந்­தது. இத்­தனை ஆண்­டு­களில் எத்­தனையோ படங்­களை இழந்­தி­ருந்­தா­லும், 'இந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் நாம் நடித்­தி­ருக்­க­லாமே...' என்று என்­னைப் பொறா­மைப்­பட வைத்­தது ஐஸ்­வர்யா நடித்த 'நந்­தினி' வேடம்­தான்," என்­கி­றார் மீனா.

தாம் முன்­னணி கதா­நா­ய­கி­யாக வலம் வந்த வேளை­யில், விஜய், அர­விந்த்­சாமி ஆகிய இரு­வ­ரு­டன் மட்­டும்­தான் இணைந்து நடிக்க முடி­ய­வில்லை என்று குறிப்­பி­டு­பவர், இது தொடர்­பாக விஜய் தன்னை அடிக்­கடி கிண்­டல் செய்­வார் என்­கி­றார்.

"அஜித்­து­டன் இணைந்து நடித்து­விட்­டேன். நான்கு படங்களில் விஜய்­யு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பு கிடைத்தும் அவை கைகூடவில்லை. 'வளர்ந்து வரும் நாய­கன் என்­ப­தால்­தானே நடிக்க மறுக்­கி­றீர்­கள். அஜித்­தானே உங்­க­ளுக்­குப் பிடித்­த­மான நாய­கன்' என்று விஜய் இப்­போ­தும் கிண்­டல் செய்­வார்," என்கிறார் மீனா.